வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

Jul 15, 2026,01:21 PM IST

சென்னை: கடந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு இலவசமாக 'ஃபிரிட்ஜ்' (Fridge) வாங்குவதற்காகப் பரிசு கூப்பன்களை விநியோகம் செய்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.




விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன், இந்தத் தேர்தல் முறைகேடு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், "தேர்தல் வெற்றிக்காக வாக்காளர்களுக்குப் பரிசு கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தேர்தல் நடைமுறையில் சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.


இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (15.07.2026) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.  இதனைத் தொடர்ந்து, தேர்தல் முறைகேடு புகார் குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission) ஆகிய இரு தரப்பும் தங்களது விளக்கத்தை நீதிமன்றத்தில் விரிவாகப் பதிலாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் தான் தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணைந்தார். ஏற்கனவே இவர் மீது குட்கா வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது தேர்தல் முறைகேடு புகாரும் அவர் மீது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு!

news

குமாரசாமியின் குலசாமி தமிழின மாக்களின் தகப்பன் சாமி!.. பெருந்தலைவர் காமராஜர்!

news

தேவகோட்டையில் மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி கையேடுகள் வழங்கல்

news

Teamwork Makes the Dream Work.. இணைந்து பணியாற்றினால் இமயம் தொடலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்