போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

Jul 15, 2026,01:21 PM IST

சென்னை: தென்னிந்தியாவில் போதைப்பொருள் புழக்கத்தையும், அதன் கடத்தலையும் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளன. இதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 


இதில் இரு மாநில எல்லைப் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவது மற்றும் கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


தமிழக முதலமைச்சர் விஜயை, கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், "போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுவது தற்போதைய சூழலில் மிகவும் அவசியமாகிறது" என்று குறிப்பிட்டார்.


மேலும், இக்கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் விஜய், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சென்னிதலா தெரிவித்தார்.




கேரளாவின் ‘ஆபரேஷன் டூபான்’ திட்டம் : 


போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து, அதன் பின்னணியில் உள்ள கடத்தல் நெட்வொர்க்குகளை முற்றிலுமாக வேரறுக்க கேரளா அரசு "ஆபரேஷன் டூபான்" (Operation Toofan) என்ற பிரத்யேக தீவிர கண்காணிப்புத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


இதற்குத் தமிழக காவல்துறையின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மிகவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதே வேளையில், தமிழக அரசும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனை இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 3,950-க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு, அவை தீவிர போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.


இந்த தீவிர நடவடிக்கைகளின் பலனாக, நடப்பு ஜூலை மாதத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 1,034 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. அதன்படி, நடப்பு 2026 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 472 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


தென் மாநிலங்களின் இந்த ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியும், எல்லைகளில் மேற்கொள்ளப்படும் தீவிரக் கண்காணிப்பும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் சர்வதேச வலைப்பின்னலை உடைக்க பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

The candle of my life.. என் வாழ்க்கையின் மெழுகுவர்த்தி

news

There is one thing that matters: your next step.. அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருங்கள்!

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு!

news

குமாரசாமியின் குலசாமி தமிழின மாக்களின் தகப்பன் சாமி!.. பெருந்தலைவர் காமராஜர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்