சென்னை: ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகம் திட்டம் பிப்ரவரி 24 முதல் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களையும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதில் விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி, இலவச பேருந்து, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், என பல்வேறு திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.
குறிப்பாக நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொலைதூரத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு சென்று நோய் தொற்றுகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சேவை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதால் கிராமப்புற மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் ஜனவரி 26ஆம் தேதி சுதந்திர தின விழா அன்று பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கிட முதல்வர் மருந்தகம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். மருந்து, மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்க தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 33 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}