சென்னை: தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேர்ந்து மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
நாடு முழுவதும் மகாத்மா காந்திக்கு அரசியல் தலைவர்களும், மக்களும் அஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தவர். இன்று மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து முதல்வர் காந்தி சிலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, திமுக எம்பிக்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம். நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம். தேச நலன் காக்கும் கதர், கிராமப்பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்க வேண்டும். கதர் பருத்தி, கதர் பாலிஸ்டர், கதர்பட்டு ரகங்கள் மக்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. மேலும் கதர் பொருட்களின் விற்பனைக்கு தமிழக அரசு என்றும் துணை நின்று அனைத்து உதவிளையும் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}