அரியலூர்: திட்டத்தை அறிவித்து விட்டோம். நிதி ஒதுக்கி விட்டோம். அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என ஓய்வெடுப்பவன் நான் இல்லை. மக்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் நேரடி கள ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். கோவையில் தொடங்கிய இந்த ஆய்வு தற்போது அரியலூர், பெரம்பலூருக்கு வந்துள்ளது. இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
திட்டத்தை அறிவித்து விட்டோம். நிதி ஒதுக்கி விட்டோம். அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என ஓய்வெடுப்பவன் நான் இல்லை. கடந்த காலத்தில் ஒரு சிலர் அப்படித்தான் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன். பிரச்சினைகளை தீர்க்கிறேன். மக்களுக்கான திட்டங்களை தீட்டுகிறேன். திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என கள ஆய்வு செய்கிறேன். சொன்னா சொன்ன நாட்களுக்குள் திட்டங்களை திறந்து வைக்கிறேன். மக்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன். அதனால் தான் இந்த ஸ்டாலின் எங்க போனாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

திராவிட மாடல் அரசு மீது மக்கள் வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததாக சிரிக்காமல் பேட்டி கொடுத்து வருகிறார் எதிர் கட்சி தலைவர் பழனிச்சாமி. அதிமுக ஆட்சியின் முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்று சொல்ல முடியுமா?. திமுக தான் தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு முன் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது பேருந்துகள் கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.
குழந்தைகள் தங்களுக்கு தேவையானவற்றை கேட்க முடியாது. அப்படி கேட்க முடியாதவர்களுக்கு அசே முன்வந்து திட்டங்களை செயல்படுத்துகிறது. காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் பயன் பெற்று குழந்தைகள் வளர்ந்து வருங்காலத்தில் நல்ல நிலையை அடையும் போது நானும் என் குடும்பமும் முன்னேற ஸ்டாலினும் ஒரு காரணம் என நிச்சயம் சொல்வார்கள். தமிழர்கள் மனதில் இந்த ஸ்டாலின் என்றும் நிறைந்திருப்பார்.
கடந்த 3 ஆண்டுகுளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய வகையில் 10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுள்ளோம். நானே பல திறப்பு விழாக்களுக்கு சொன்று திறந்து வைத்து விட்டு வருகிறேன். இது தான் நல்ல ஆட்சியின் அடையாளம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
{{comments.comment}}