சென்னை: அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் 19 நாட்கள் தங்கி பணிகளை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தும் பேசத் தொடங்கியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரூ. 900 கோடி முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் அப்லைடு செட்டீரியல்ஸ் நிறுவனம் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கிறது. அதே போல கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமைகிறது இந்த ஆலை.
இது தவிர மதுரை வடபழஞ்சி எல்காட் தொழிற்பேட்டையில் இன்பின்க்ஸ் நிறுவனத்தின் மையம் ரூ.50 கோடியில் அமைகிறது.
ஒட்டுமொத்த முதலீகள் மூலமாக மதுரை, சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் உள்ள 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}