ஒரு சாதாரண பேச்சுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

Mar 24, 2023,11:35 AM IST
சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய சாதாரண பேச்சுக்கு இவ்வளவு பெரிய சிறைத் தண்டனை கொடுப்பது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது மட்டுமல்ல, வரலாறு காணாததும் கூட என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சூரத் மாவட்ட கோர்ட், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. தீர்ப்பு குறித்து இரு விதமான கருத்துக்கள் வருகின்றன. பாஜக தரப்பு மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இந்தத் தண்டனையை வரவேற்றுள்ளனர். 



அதேசமயம், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த தண்டனை மிக மிக அதிகமானது, தேவைற்றது என்று கருத்து கூறி வருகின்றன. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறுகையில், இது ஏற்றுக் கொள்ள முடியாதது. வரலாறு காணாதது. ஒரு சாதாரண பேச்சுக்காக இவ்வளவு பெரிய தண்டனை என்பது நியாயமற்றது. யாரையும் குற்றம் சாட்டும் மன நிலையில் ராகுல் காந்தி பேசவில்லை. வேண்டும் என்றே அவர் பேசவில்லை.

எதிர்க்கட்சிகளை தொடர்ந்து குறி வைத்து வேட்டையாடுகிறது பாஜக. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறது பாஜக. அதன் அட்டகாசங்கள் விரைவில் முடிவுக்கு வரும். நான் அன்பு சகோதரர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி எனது ஆதரவைத் தெரிவித்தேன். நிச்சயம் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

அகில இந்திய அளவில் ராகுல்காந்திக்கு மிகத் தீவிரமான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து கொடுத்து வருவது திமுக மட்டுமே. ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் என்றும் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்