சிக்பல்லாபூர்: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையும், மாணவர் ஒருவரும் சேர்ந்து எடுத்த ரொமான்டிக் போட்டோஷூட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்லா அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைதான் இந்த காதல் ரொமான்டிக் போட்டோஷூட்டை நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த போட்டோவில் தலைமை ஆசிரியையும் மாணவனும் கட்டிப் பிடித்தபடியும், சேலையைப் பிடித்து இழுப்பது, ரோஜாப் பூ கொடுப்பது போலவும், டீச்சரை மாணவன் தூக்கி பிடிப்பது போலவும், இருவரும் மாறி மாறி கன்னத்தில் முத்தமிடுவது என்று கல்யாண போட்டோஷூட்களில் செய்வது போல ரொம்ப இன்டிமேட்டாக செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை எப்பொழுது எடுத்துள்ளார்கள் தெரியுமா? கல்வி சுற்றுலா பயணத்தின் போது இந்த போட்டோக்களை எடுத்துள்ளனர்.
இந்த போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. புகைப்படங்களை இணையத்தில் பார்த்த பெற்றோர்கள் ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை கூறுகையில், அம்மா மகன் உறவு போலத்தான் இது. இதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் எங்களுக்குள் வைத்துக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட படம் இது. ஆனால் எப்படி லீக் ஆனது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், ஆசிரியை, மாணவனிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார், அவனது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார் எனவே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம், இந்த பயணத்தின்போது சம்பந்தப்பட்ட மாணவனிடம் மிகவும் நெருக்கமாக இருந்தாராம் இந்த தலைமை ஆசிரியை.
சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரும், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆசிரியையின் முழுமையான நடவடிக்கை குறித்தும் முழுமையாக விசாரிக்கவும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் இணையத்தில் கண்டனத்திற்குரியதாகி வருகிறது. கல்வி பயணத்தின் போது இத்தகைய சம்பவம் நடந்திருப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியையே இவ்வாறு நடந்து கொண்டால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து கவலை எழுந்துள்ளதாக பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர்- மாணவர் உறவு என்பது உன்னதமானது. ஒரு மாணவனின் வாழ்க்கை பாடம் பள்ளிகளில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன. ஆசிரியை குருவாக கருதப்படும் இடத்தில் வைப்பதற்கு காரணம் மாணவர்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஆசிரியரின் பங்கு ஆளப்பரியதாக இருப்பதால் தான். முன்பெல்லாம் ஆசிரியரை பார்த்தால் பயம், பக்தி இரண்டும் இருந்தது. தற்பொழுது அது மாறிவிட்டது. ஆசிரியர்களை பார்த்தாலே பயந்து நடுங்கிய காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இந்த சூழலில், மாணவனுடன் ஆசிரியை இப்படி ரொமான்டிக்கான போட்டோஷூட் நடத்தியிருப்பது அதிர வைப்பதாக உள்ளது.
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதி சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
Trump Card: 50 லட்சம் டாலர் கொடுத்தால் கோல்ட் கார்டு.. அதிரடி திட்டத்தை இறக்கிய டிரம்ப்!
{{comments.comment}}