சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்

Jun 17, 2025,12:47 PM IST

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தமிழக ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.  இந்த விவகாரத்தில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் 5  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பூவை ஜெகன் மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி ஜெயராமனின் காரில் திரும்பக் கொண்டு வந்து விடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். எனவே இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து 7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.




இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக நேற்று பிற்பகல்  ஆஜராகும்படி பூவை ஜெகன் மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமனுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். இதை அடுத்து இந்த வழக்கில் ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்க நீதிபதி வேல்முருகன் ஆணையிட்டார். 


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜெயராமை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து, குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

news

அஜித்தை அடுத்து இயக்க போவது இவர் தானாமே...கதையையும் இப்பவே சொல்லிட்டாரே

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!

news

துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்

news

சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்