சென்னை: சென்னையில் கேரட் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிக் கொண்டதால், மூச்சு திணறல் ஏற்பட்டு இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாப்பிடும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வேகம் வேகமாக சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் சாப்பிடுவது, எல்லாவற்றையும் வாயில் போட்டு அவசரமாக சாப்பிடுவது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடும். சரியாக சாப்பிடாமல் தொண்டையில் சிக்கிக் கொள்வது, சிக்கி விக்கல் வருவது, சரியாக மெல்லாமல் உள்ளே தள்ளுவதால் அஜீரணப் பிரச்சினைகள் என பின்னர் அவதிப்பட நேரிடும். சிலர் தண்ணீரைக் கூட வேகமாக குடித்து புரைக்கேறி அவதிப்படுவார்கள்.

இப்படித்தான் சென்னையில் ஒரு சிறுமி கேரட்டை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி அந்தக் குழந்தையின் உயிரே போய் விட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தை லத்திகா. இவர் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபடியே கேரட் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது கேரட் துண்டுகள் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் துடித்து மயக்கமுற்றது. பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பிறகு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வழியிலேயே குழந்தை இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.
இதனை அறிந்த போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரட் சாப்பிட்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு பல் முளைக்காத சமயத்தில் கேரட் போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம்தான். காரணம், அதேசமயம், இதுபோன்று கொடுக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு கேரட்டைக் கொடுப்பது ஆபத்தானது. சரியாக மெல்லாமல் உள்ளே முழுங்கி விடுவதால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்பட்டு விடுகிறது என்பதை பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}