பெங்களூரு : சீனாவில் கடந்த சில வாரங்களாக பரவி உலக நாடுகளை பரபரப்படைய வைத்த HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது. முதல் HMPV வைரஸ் பாதிப்பு இந்தியாவில், அதுவும் பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக HMPV வைரஸ் என்ற ஒரு வகையான வைரஸ் வேகமாக பரவி வந்தது. இன்ஃபுளுயன்சா, நிமோனியா ஆகிய காய்ச்சல்களின் அறிகுறிகளான சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் தான் இதற்கும் உள்ளது. இந்த வைரஸ் குழந்தைகள், பெரியவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக பலரும் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் உருவாகி உள்ளதாக உலகம் முழுவதும் பதற்றமான நிலை காணப்பட்டது.

ஆனால் HMPV வைரஸ் என்பது புதிய வகை வைரஸ் கிடையாது, 2021 ம் ஆண்டு முதலே உள்ளது தான் என சீன சுகாதார துறையும், உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுகாதாரத்துறையும் தொடர்ந்து அப்டேட் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் HMPV வைரஸ் பரவ துவங்கி உள்ளது உறுதியாகி உள்ளது.
பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. அந்த குழந்தையின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது சாதாரணமாக குளிர்காலங்களில் பரவக் கூடிய ஃபுளு தான் என சொல்லப்படுகிறது. சீனாவில் பரவி வரும் இந்த வைரசை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாகவும். சீனாவில் பரவி வரும் வைரஸ் என்பது வழக்கத்திற்கு மாறானது கிடையாது என இந்திய சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
{{comments.comment}}