அச்சச்சோ.. சீனாவிலிருந்து வந்துருச்சு.. இந்தியாவின் முதல் HMPV வைரஸ்.. பெங்களூருவில் கண்டுபிடிப்பு

Jan 06, 2025,11:24 AM IST

பெங்களூரு : சீனாவில் கடந்த சில வாரங்களாக பரவி உலக நாடுகளை பரபரப்படைய வைத்த  HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது. முதல்  HMPV வைரஸ் பாதிப்பு இந்தியாவில், அதுவும் பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் கடந்த சில வாரங்களாக  HMPV வைரஸ் என்ற ஒரு வகையான வைரஸ் வேகமாக பரவி வந்தது. இன்ஃபுளுயன்சா, நிமோனியா ஆகிய காய்ச்சல்களின் அறிகுறிகளான சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் தான் இதற்கும் உள்ளது. இந்த வைரஸ் குழந்தைகள், பெரியவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக பலரும் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.  இதனால் மீண்டும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் உருவாகி உள்ளதாக உலகம் முழுவதும் பதற்றமான நிலை காணப்பட்டது.




ஆனால் HMPV வைரஸ் என்பது புதிய வகை வைரஸ் கிடையாது, 2021 ம் ஆண்டு முதலே உள்ளது தான் என சீன சுகாதார துறையும், உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுகாதாரத்துறையும் தொடர்ந்து அப்டேட் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும்  HMPV வைரஸ் பரவ துவங்கி உள்ளது உறுதியாகி உள்ளது.


பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு  HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. அந்த குழந்தையின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது சாதாரணமாக குளிர்காலங்களில் பரவக் கூடிய ஃபுளு தான் என சொல்லப்படுகிறது. சீனாவில் பரவி வரும் இந்த வைரசை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாகவும். சீனாவில் பரவி வரும் வைரஸ் என்பது வழக்கத்திற்கு மாறானது கிடையாது என இந்திய சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்