பெங்களூரு : சீனாவில் கடந்த சில வாரங்களாக பரவி உலக நாடுகளை பரபரப்படைய வைத்த HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது. முதல் HMPV வைரஸ் பாதிப்பு இந்தியாவில், அதுவும் பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக HMPV வைரஸ் என்ற ஒரு வகையான வைரஸ் வேகமாக பரவி வந்தது. இன்ஃபுளுயன்சா, நிமோனியா ஆகிய காய்ச்சல்களின் அறிகுறிகளான சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் தான் இதற்கும் உள்ளது. இந்த வைரஸ் குழந்தைகள், பெரியவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக பலரும் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் உருவாகி உள்ளதாக உலகம் முழுவதும் பதற்றமான நிலை காணப்பட்டது.

ஆனால் HMPV வைரஸ் என்பது புதிய வகை வைரஸ் கிடையாது, 2021 ம் ஆண்டு முதலே உள்ளது தான் என சீன சுகாதார துறையும், உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுகாதாரத்துறையும் தொடர்ந்து அப்டேட் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் HMPV வைரஸ் பரவ துவங்கி உள்ளது உறுதியாகி உள்ளது.
பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. அந்த குழந்தையின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது சாதாரணமாக குளிர்காலங்களில் பரவக் கூடிய ஃபுளு தான் என சொல்லப்படுகிறது. சீனாவில் பரவி வரும் இந்த வைரசை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாகவும். சீனாவில் பரவி வரும் வைரஸ் என்பது வழக்கத்திற்கு மாறானது கிடையாது என இந்திய சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}