அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலில் வீபத்து.. 55 சீன வீரர்கள் உயிரோடு ஜல சமாதி!

Oct 04, 2023,04:50 PM IST

பெய்ஜிங்: சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் அந்தக் கப்பலில் இருந்த 55 கடற்படை வீரர்களும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்க மற்றும் இங்கிலாந்து கப்பல்களைக்  கண்காணிப்பதற்காக அனுப்பபப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இது. எதிர்பாராத விதமான விபத்தால் இந்த கப்பல் அப்படியே கடலில் மூழ்கி விட்டது. இதனால் கப்பலில் இருந்த 55 கடற்படையினரும் உயிரோடு கடலில் மூழ்கி விட்டனர். யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த விபத்தானது மஞ்சள் கடலில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்த தகவலை சீனா மறுத்துள்ளது. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று அது கூறியுள்ளது. அதேபோல தைவானும் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் டைம்ஸ் பத்திரிகை இதுதொடர்பான விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது. 


093-417 என்ற எண் கொண்ட அந்த சீன நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் மூழ்கி விட்டதாகவும், அதில் 55 வீரர்கள் இருந்ததாகவும் டைம்ஸ் செய்தி கூறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி இந்த விபத்து நடந்ததாகவும் அது மேலும் கூறியுள்ளது.


வடக்கு ஷாங்காய் அருகே சன்டாங் மாகாணத்தையொட்டி கப்பல் நிலை கொண்டிருந்தபோது ஆக்சிஜன் தீர்ந்து போனதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கப்பலுக்குள் இருந்த அனைவருமே மூச்சுத் திணறி இறந்து போயுள்ளனர். கடலுக்கு அடியில் இங்கிலாந்து, அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்தால் அதை பிடிப்பதற்காக பல்வேறு தடுப்புகளை போட்டு வைத்துள்ளது  சீன  கடற்படை. அப்படிப்பட்ட ஒரு தடுப்பில் போய் சீனாவின் இந்த நீர்மூழ்கிக் கப்பல் சிக்கிக் கொண்டதால்தான் விபத்து நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அமெரிக்காவுக்கு சீனா வைத்த ஆப்பில் அதுவே சிக்கிக் கொண்டு விட்டது.


சீனாவிடம் அணு சக்தியால் இயங்கக் கூடிய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் 6 உள்ளன. கடந்த 15 வருடமாக இவை செயல்பாட்டில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்