பெய்ஜிங்: சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் அந்தக் கப்பலில் இருந்த 55 கடற்படை வீரர்களும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து கப்பல்களைக் கண்காணிப்பதற்காக அனுப்பபப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இது. எதிர்பாராத விதமான விபத்தால் இந்த கப்பல் அப்படியே கடலில் மூழ்கி விட்டது. இதனால் கப்பலில் இருந்த 55 கடற்படையினரும் உயிரோடு கடலில் மூழ்கி விட்டனர். யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தானது மஞ்சள் கடலில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்த தகவலை சீனா மறுத்துள்ளது. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று அது கூறியுள்ளது. அதேபோல தைவானும் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் டைம்ஸ் பத்திரிகை இதுதொடர்பான விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது.
093-417 என்ற எண் கொண்ட அந்த சீன நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் மூழ்கி விட்டதாகவும், அதில் 55 வீரர்கள் இருந்ததாகவும் டைம்ஸ் செய்தி கூறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி இந்த விபத்து நடந்ததாகவும் அது மேலும் கூறியுள்ளது.
வடக்கு ஷாங்காய் அருகே சன்டாங் மாகாணத்தையொட்டி கப்பல் நிலை கொண்டிருந்தபோது ஆக்சிஜன் தீர்ந்து போனதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கப்பலுக்குள் இருந்த அனைவருமே மூச்சுத் திணறி இறந்து போயுள்ளனர். கடலுக்கு அடியில் இங்கிலாந்து, அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்தால் அதை பிடிப்பதற்காக பல்வேறு தடுப்புகளை போட்டு வைத்துள்ளது சீன கடற்படை. அப்படிப்பட்ட ஒரு தடுப்பில் போய் சீனாவின் இந்த நீர்மூழ்கிக் கப்பல் சிக்கிக் கொண்டதால்தான் விபத்து நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அமெரிக்காவுக்கு சீனா வைத்த ஆப்பில் அதுவே சிக்கிக் கொண்டு விட்டது.
சீனாவிடம் அணு சக்தியால் இயங்கக் கூடிய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் 6 உள்ளன. கடந்த 15 வருடமாக இவை செயல்பாட்டில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
{{comments.comment}}