திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 2500 சிறப்பு பஸ்கள், 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ் பெற்றது. அக்னி தலமான இக்கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்தால் கடவுளின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாதங்களில் பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை சுற்றி வந்து சாமிதரினம் செய்வார்கள்.
இந்தாண்டிற்கான சித்திரை மாத பவுர்ணமி தினம் நாளை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் கிரிவலம் வருவதற்காக வெளி மாவட்டங்கள், வெளி ஊர்கள், ஏன் வெளி நாடுகளில் இருந்தும் வருவார்கள். இவர்களின் வசதிக்காக 2500 சிறப்பு பஸ்களும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 2500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த விழுப்புரம் மற்றும் வேலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
20 தனியார் மற்றும் 81 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் 6 சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள், 108 அவசர வாகனங்கள் 20வதும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும். மேலும், 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}