இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் பலரும் அறியாத கிறிஸ்துமஸ் நடைமுறைகள் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
பலரும் அறியாத கிறிஸ்தமஸ் கொண்டாட்ட சுவாரஸ்யங்கள் :
* பெரும்பாலான கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25ம் தேதி தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ஆனால் கிழக்கு மரபு வழி திருச்சபைகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜனவரி 07ம் தேதியை தான் கிறிஸ்து அவதரித்த நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
* டிசம்பர் 25ம் தேதி தான் இயேசு கிறிஸ்து அவதரித்தார் என பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இயேசு கிறிஸ்து எப்போது அவதரித்தார் என்பது யாருக்கும் சரியாக தெரியாது. கி.பி., 4ம் நூற்றாண்டில் போப் ஜூலியஸ் தான் டிசம்பர் 25ம் தேதியை தேர்வு செய்து இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.

* ஆரம்ப காலத்தில் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகையாக மட்டுமே இருந்து வந்தது. தேவாலய சேவைகளை செய்வதற்கும், அமைதி மற்றும் நற்பண்புகளை அனைவரிடமும் பரப்புவதற்கான நாளாக மட்டுமே இருந்து வந்தது.
* பிறகு காலப் போக்கில் பல்வேறு பிரிவுகள், கலாச்சாரங்கள் உருவானதாலும், பல பாரம்பரிய மக்கள் கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு இதற்கு மாறியதாலும் மெல்ல மெல்ல கிறிஸ்துமஸ் கொண்டாடும் முறைகளில் மாற்றம் ஏற்பட்டது.
* டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, திருப்பலி நற்கருணை விருந்தம் நடைபெறும்.
* இதற்கு பிறகே கிறிஸ்து அவதரித்து விட்டதன் அடையாளமாக கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் நாணல் போன்ற புல்லினால் குடி அமைத்து, குழந்தை இயேசுவின் வடிவத்தை வைப்பார்கள்.
* கிறிஸ்துமஸ் அவதரித்த நாளே தங்கள் வாழ்வில் புதிய ஒளி பிறந்ததாக எண்ணி புத்தாண்டை அணிந்து, வான வேடிக்கை, விருந்து என கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.
* கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து சிலர் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, வாழ்த்து தெரிவிப்பார்.
* கி.பி., 17ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் பற்றி பைபிளில் எங்கும் குறிப்பிடவில்லை என கூறி இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதித்திருந்தனர். அதற்கு பிறகு 12 முதல் 14 வருடங்களுக்கு பிறகு தான் மீண்டும் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் துவங்கப்பட்டன.
* சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்தமஸ் தாத்தா எப்படி இருப்பார் என்றும் யாருக்கும் தெரியாது. தற்போதுள்ள படி சிவப்பு அங்கி, வெள்ளை தாடி உடன் இருக்கும் உருவத்தை கொடுத்து, அவரை ஜாலியான மனிதராக உருவம் கொடுத்து உருவாக்கியது 1930களில் கோக்கோ கோலா நிறுவனம் விளம்பரம் தான்.
* கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து, அவற்றில் மெழுகுவர்த்தி போன்ற பல விதமான அலங்கார பொருட்களால் அலங்கரிக்கும் முறை 16ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் தோன்றிய முறையாகும்.
* இயேசு கிறிஸ்து பிறந்த நாளை நினைவு கூறுமக் விதமாக கிறிஸ்தமஸ் பண்டிகை கொண்டாடுவதாக சொல்லப்பட்டாலும் அது அன்பு, மகிழ்ச்சி, உற்சாகம், மனிதர்களிடம் ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்தும் பண்டிகை என்பதால் அனைத்து மதத்தினராலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!
{{comments.comment}}