கொழும்பு: இலங்கையைப் பொறுத்தவரை கிரிக்கெட்தான் மிகப் பெரிய பொழுதுபோக்கு. அதற்கு அடுத்து சினிமாதான். குறிப்பாக, தமிழ், இந்திப் படங்கள் அங்கு மிகப் பிரபலம் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவரது காலத்தில் மிகப் பிரபலமான வீரராக வலம் வந்தவர். சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீரராக பல காலம் திகழ்ந்தவரும் கூட. இவர் ஒரு போட்டியில் விளையாடுகிறார் என்றால் இவரது பந்து வீச்சைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூடுவார்கள்.
ஆஸ்திரேலியாவின் மறைந்த ஷான் வார்னேவுக்கும், முரளிதரனுக்கும் இடையே நிலவிய, விக்கெட் வீழ்த்துவதில் காணப்பட்ட போட்டா போட்டி படு சுவாரஸ்யமானது. இருவருமே மிகப் பெரிய ஜாம்பவான்கள். சமீபத்தில் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டது.. இப்படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் நடிக்கவில்லை.
இந்த நிலையில் பிடிஐக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறியுள்ளார் முரளிதரன். இலங்கையைப் பொறுத்தவரை கிரிக்கெட்தான் முதல் பிரதான பொழுது போக்கு. அதற்கு அடுத்து பார்த்தால் சினிமாதான். தமிழ், இந்தி சினிமாப் படங்கள் அங்கு நல்ல வரவேற்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளார் முரளிதரன்.
சமீபத்தில் தான் ஜெயிலர், லியோ படங்களைப் பார்த்து ரசித்ததாகவும், இந்தியில் ஜவான், டைகர் 3 படங்களைப் பார்த்ததாகவும் கூறினார் முரளிதரன்.
"இலங்கையில் தயாரிக்கப்படும் படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுபவை அல்ல. சின்ன பட்ஜெட்தான். இருப்பினும் தாய்மொழிப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள். எனவே சின்னப் படங்களும் கூட தியேட்டர்களில் நன்றாக ஓடும். அடுத்து பார்ததால், இந்தி, தமிழ் சினிமாவுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் முரளிதரன்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}