பெங்களூர்: பெங்களூரு அனில் கும்ப்ளே ரவுண்டானா பகுதியில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பெங்களூருவில் எம் ஜி சாலை அருகில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கஸ் பகுதியில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீ பிடித்துக் கொண்டது. தீ மளமளவென எரியத் தொடங்கியதும், டிரைவர் சுதாரித்து உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த பயணிகளை வெளியே போகுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பேருந்தில் இருந்த 30 பயணிகளும் வேகமாக வெளியேறினர்.
டிரைவரின் சமயோஜிதம், பயணிகளின் வேகம் காரணமாக, நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஞ்சின் அதிகம் சூடேறியதால் பேருந்தில் தீப்பிடித்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதேபோலத்தான் சமீபத்தில் சென்னையிலும் அரசு பஸ் இப்படி தீப்பிடித்துக் கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}