பெங்களூர்: பெங்களூரு அனில் கும்ப்ளே ரவுண்டானா பகுதியில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பெங்களூருவில் எம் ஜி சாலை அருகில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கஸ் பகுதியில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீ பிடித்துக் கொண்டது. தீ மளமளவென எரியத் தொடங்கியதும், டிரைவர் சுதாரித்து உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த பயணிகளை வெளியே போகுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பேருந்தில் இருந்த 30 பயணிகளும் வேகமாக வெளியேறினர்.
டிரைவரின் சமயோஜிதம், பயணிகளின் வேகம் காரணமாக, நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஞ்சின் அதிகம் சூடேறியதால் பேருந்தில் தீப்பிடித்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதேபோலத்தான் சமீபத்தில் சென்னையிலும் அரசு பஸ் இப்படி தீப்பிடித்துக் கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}