பெங்களூர்: பெங்களூரு அனில் கும்ப்ளே ரவுண்டானா பகுதியில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பெங்களூருவில் எம் ஜி சாலை அருகில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கஸ் பகுதியில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீ பிடித்துக் கொண்டது. தீ மளமளவென எரியத் தொடங்கியதும், டிரைவர் சுதாரித்து உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த பயணிகளை வெளியே போகுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பேருந்தில் இருந்த 30 பயணிகளும் வேகமாக வெளியேறினர்.
டிரைவரின் சமயோஜிதம், பயணிகளின் வேகம் காரணமாக, நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஞ்சின் அதிகம் சூடேறியதால் பேருந்தில் தீப்பிடித்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதேபோலத்தான் சமீபத்தில் சென்னையிலும் அரசு பஸ் இப்படி தீப்பிடித்துக் கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}