பெங்களூர்: பெங்களூரு அனில் கும்ப்ளே ரவுண்டானா பகுதியில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பெங்களூருவில் எம் ஜி சாலை அருகில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கஸ் பகுதியில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீ பிடித்துக் கொண்டது. தீ மளமளவென எரியத் தொடங்கியதும், டிரைவர் சுதாரித்து உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த பயணிகளை வெளியே போகுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பேருந்தில் இருந்த 30 பயணிகளும் வேகமாக வெளியேறினர்.

டிரைவரின் சமயோஜிதம், பயணிகளின் வேகம் காரணமாக, நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஞ்சின் அதிகம் சூடேறியதால் பேருந்தில் தீப்பிடித்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதேபோலத்தான் சமீபத்தில் சென்னையிலும் அரசு பஸ் இப்படி தீப்பிடித்துக் கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}