நெல்லை: அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் அடுத்தடுத்து கலாட்டாக்கள் அரங்கேறுவதால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம். கும்பகோணம் கூட்டத்தில் ஒரு கலாட்டா நடந்த நிலையில் இன்று நெல்லையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது பெரும் கை கலப்பே அரங்கேறி அதிர வைத்துள்ளது.
நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் இருதரப்பு நிர்வாகிகளுக்கு இடையே பெரும் கலாட்டா ஏற்பட்டு விட்டது. இதே போல கும்பகோணத்திலும் அதிமுக கள ஆய்வில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்திருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்த குழுவினர் மாவட்டம் தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் கலந்து வருகின்றனர்.
இந்தநிலையில்,இன்று நெல்லை மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கடையே மோதல் ஏற்பட்டது. நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன் மாவட்ட செயலாளர் கணேச ராஜா தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை பார்த்த எஸ்பி வேலுமணி மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச முற்பட்ட போது, அவரை இடைமறித்து நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மேடையில் இருந்தவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது. அதன்பின்னர் அவர்களை சமாதானம் செய்தார் திண்டுக்கல் சீனிவாசன். இதனால், அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து கட்சி கூட்டங்களில் நடைபெறும் கலாட்டாக்களால் கட்சித் தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாம். மேலும் கூட்டணிக் கட்சிகள் கூட்டணிக்கு வர கோடிக்கணக்கில் பணம் கேட்கின்றன. அதிமுகவினர் தேர்தல் பணிகளைச் செய்ய காசு கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் வேலை செய்வதில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசும் பேச்சுக்களையும் கூட கட்சித் தலைமை விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}