சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி மோகனாவுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள மோகனா , நீதித்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். வழக்கறிஞர் துறையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2-ஆவது பெண்மணி என்ற பெருமையையும், அதே வேளையில் இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இவருடைய இந்த நியமனம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: "வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2-ஆவது பெண்மணி மற்றும் முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள மோகனா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மாண்புமிகு நீதிபதி மோகனா அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மோகனா அவர்களின் இந்த உயர்வு, சட்டத்துறையில் கால்பதிக்கும் பல இளம் பெண்களுக்கு, குறிப்பாகத் தமிழகப் பெண்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}