ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

Nov 25, 2024,05:54 PM IST

டில்லி :   பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேலையில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சிற்கு அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதல்வரை மிக கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.


சென்னையில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வரை சந்தித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளது பற்றி முதல்வரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். ராமதாசுக்கு வேறு வேலையில்லை. அதனால் தான் ஏதாவது ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு எல்லாம் பதிலளித்து கொண்டிருக்க வேண்டிய அவசியல்லை" என தெரிவித்திருந்தார்.




பாமக நிறுவனர் பற்றி முதல்வர் கூறிய கருத்து தொடர்பாக டில்லியில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, இப்படிப்பட்ட ஆணவ பேச்சு முதல்வரின் பதவிக்கு அழகல்ல. ராமதாஸ் இல்லாவிட்டால் 2006ல் இவர்களால் தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. உங்கள் தந்தை முதல்வராகியிருக்க முடியாது. அவரது உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் கூட இடம் கிடைத்திருக்காது.


அப்படிப்பட்ட ராமதாஸை, 86 வயதான மூத்த தலைவரை, அவருக்கு வேலை இல்லை என சொல்வது அவரை அவமதிக்கும் செயலாகும். இது வன்மையாக கண்டிக்கதக்கது. இதற்காக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாது.


முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதட்டம்.. அவர் பதட்டம் அடையும் அளவுக்கு மருத்துவர் ராமதாஸ் எதையும் கேட்டு விடவில்லையே. அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கும் விவகாரம் தொடர்பான நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு மின்வாரியமும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து முதல்வர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றுதானே மருத்துவர் ராமதாஸ் கேட்டிருந்தார். அது மிகவும் சரியானதே. 


அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் மானம் அமெரிக்காவில் கப்பலேறிக் கொண்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அக்கறை இல்லாமல் இருக்கலாம். கவலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும், அரசியல் கட்சியின் நிறுவனராகவும் மருத்துவர் ராமதாஸுக்கு அக்கறை உள்ளது. அதனால்தான் இந்த குற்றச்சாட்டுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்