சென்னை: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா என்ற கேள்விக்கு மதுரை மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதுரையில் ஒரு புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் எந்தத் திசையில் போகப் போகிறது என்று தெரியவில்லை. மிக மிக உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினையை மதுரை மக்கள் எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ இரயில்,
AIIMS,
புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது என்று அதில் முதல்வர் கூறியுள்ளார்.
இந்த எக்ஸ் தளப் பதிவு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மதுரையின் நீண்ட கால கோரிக்கை எய்ம்ஸ். அதன் கட்டடம் இன்னும் முடியவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாகவும் தாமதம் நிலவுகிறது. மதுரையில் பெரிய அளவில் தொழிற்சாலைகளும் இல்லை. இதைத்தான் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதில் எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ ஆகியவை மத்திய அரசுடனும் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!
அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!
கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி
தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!
India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!
இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!
ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!
{{comments.comment}}