10ம் வகுப்பு பொதுத் தேர்வில்.. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு.. முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து!

May 10, 2024,05:22 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.


கடந்த மார்ச் 26 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வுகள் மாநில முழுவதும் மொத்தம் 4107 மையங்களில் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதில் 8,18, 743 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது, மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!


மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!


மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்