முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களால்.. வேளாண் துறையில் சாதனை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

May 23, 2024,04:19 PM IST

சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த சீர்மிகு திட்டங்களால் உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கை:




தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு துறைகளில் பல நலத்திட்ட திட்டங்களை வகுத்தார். இந்தத் திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக வேளாண்மை துறைக்காக  தமிழ்நாட்டில் முதல்முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.


இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வேளாண்மை திட்டத்தில் இதுவரை, விவசாயிகள் பயன்பெறும் வகையில் 270 கோடி செலவில் 2163 டிராக்டர்கள், 9303 பவர் டில்லர்கள், 288 அறுவடை இயந்திரங்கள், 2868 விவசாய பிற கருவிகள் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 24.50 லட்சம் விவசாயிகளுக்கு 4,366 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த மூன்று ஆண்டு காலங்களில் வறட்சி பேரிடரால் 12.88 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர் பயிர் சேதங்களுக்கு ரூபாய் 582 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.


கரும்பு உற்பத்திக்கு ஊக்கத்தொகை, சிறப்பு உற்பத்தி தொகை, என ரூபாய் 651 கோடி  ரூபாய் 4.4 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகள் 27.5 கோடி செலவில் 100 உழவர் சந்தைகள் புரனமைக்கப்பட்டுள்ளது.  10 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே உள்ள 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.


71 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை கடனாக 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகி உழவர்கள் பயனடைகின்றனர். தமிழ்நாடும் உணவு உற்பத்தியில் முன்னேறி உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக சாதனை படைத்ததாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்