மதுரை: மதுரையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
திமுக மாநில பொதுக் குழு கூட்டம் (நாளை) ஜூன் 1ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாக மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
90 ஏக்கரில் உள்ள இந்த திடலில் குளுகுளு ஏசி வசதியுடன், உள்புறம் வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றுத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரம்மாண்ட கட் அவுட்டுகளும் திமுக அரசின் சாதனை விளக்கும் வகையில் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அரங்கின் முன்பு 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பசுமையான புல்வெளிகள் பூத்துக் குலுங்கும் மலர்களுடன் செயற்கை நீறூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் இன்று மதியம் 12 மணி அளவில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர் மூர்த்தி தலைமையிச் செயலாளர் கோ.தளபதி, எம்எல்ஏ மணிமாறன் தலைமையில் திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று முதல்வர் ஓய்வெடுக்கிறார்.
அதன்பின்னர் மாலை அங்கிருந்து கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை பகுதிக்கு முதல்வர் வருகிறார். அங்கிருந்து முதலமைச்சர் பங்கேற்கும் பிரம்மாண்டமான ரோடு ஷோ தொடங்குகிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோடு ஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், சுந்தர்ராஜபுரம் மார்க்கெட், டிவிஎஸ் நகர், சுரங்கப்பாதை வழியாக பனங்காநத்தம், வ.உ.சி பாலம், எல்லிஸ் நகர் 70 அடி ரோடு, பைபாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டான, கிராஸ் ரோடு வழியாக மேயர் முத்து சிலை பகுதிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ரோடு ஷோ செல்லும் வழியில் ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள வீரகாளி அம்மன் கோயிலில் 50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூறையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.அதன் பின்னர் நாளை நடைபெறும் பொது குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த பொழுக்குள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மு. க. ஸ்டாலின் வெளியிடுகிறார். முதல்வர் வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி.. செம்மொழி நாளாக கொண்டாடுவோம்.. திமுக தீர்மானம்
திமுகவுக்கு நன்றி.. 2026 தேர்தலையொட்டி எங்களது நகர்வுகள் இருக்கும்.. பிரேமலதா பரபரப்பு பேட்டி
ராஜ்யசபா தேர்தல்..தேமுதிகவுக்கு சீட் இல்லை.. 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!
நள்ளிரவில் கால்வாயை பார்வையிட்டு நாடகமா.. மதுரை மக்கள் என்ன முட்டாள்களா?.. அண்ணாமலை
எடப்பாடி பழனிச்சாமி குறித்து இயல்பை மீறி பேசி விட்டேன்.. வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஆதவ் அர்ஜூனா
மாற்றுத் திறனாளிகள் மற்றும் கல்வியாளர்கள்.. திமுகவில் மேலும் 2 புதிய அணிகள் அறிவிப்பு!
நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!
கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!
தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
{{comments.comment}}