கள ஆய்வு பணி.. 2 நாள் பயணமாக.. இன்று ஈரோடு செல்கிறார்.. முதல்வர் மு க ஸ்டாலின்!

Dec 19, 2024,11:19 AM IST

ஈரோடு: தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுமையாக சென்று அடைகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் ஈரோட்டில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.


தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய நல திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுதாக சென்றடைகிறதா என்பது குறித்து  அனைத்து மாவட்டங்களிலும் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன்பிறகு கட்சி பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.




அதன்படி தற்போது மாவட்ட வாரியாக அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த நவம்பர் 5, 6 தேதிகளில் முதன் முதலாக கோவைக்குச் சென்று அங்கு கள ஆய்வுப் பணிகளை தொடங்கினார். அப்போது சென்னையில் அண்ணா பெயரில் நூலகமும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைந்திருப்பதுபோல, கோவையில் மிகப் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்படும். 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என அறிவித்தார். 


இதனைத் தொடர்ந்து நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கலிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஈரோடு செல்கிறார். இதற்காக இன்று காலை ஈரோட்டுக்கு அவர் புறப்பட்டுச் செல்கிறார்.


ஈரோடு வந்ததும், மதியம் ஒரு மணி அளவில் காளிங்கராயன் இல்லம் செல்கிறார். பிறகு மாலை 5 மணிக்கு தங்கம் மஹாலில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் முத்து மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிறகு இரவு காளிங்கராயன் இல்லத்தில் தங்குகிறார். 


மறுநாள் காலை 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சோலார் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்து  கொள்கிறார்.பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கியும் வைக்கிறார். தமிழ்நாடு அரசு  சார்பில் 50,088 பேருக்கு சுமார் ரூ.284 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.


நலத்திட்ட உதவிகளை வழங்கி முடித்த பிறகு காலை 11 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பி மதியம் 2 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைவார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்