ஈரோடு: தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுமையாக சென்று அடைகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் ஈரோட்டில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய நல திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுதாக சென்றடைகிறதா என்பது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன்பிறகு கட்சி பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதன்படி தற்போது மாவட்ட வாரியாக அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த நவம்பர் 5, 6 தேதிகளில் முதன் முதலாக கோவைக்குச் சென்று அங்கு கள ஆய்வுப் பணிகளை தொடங்கினார். அப்போது சென்னையில் அண்ணா பெயரில் நூலகமும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைந்திருப்பதுபோல, கோவையில் மிகப் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்படும். 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கலிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஈரோடு செல்கிறார். இதற்காக இன்று காலை ஈரோட்டுக்கு அவர் புறப்பட்டுச் செல்கிறார்.
ஈரோடு வந்ததும், மதியம் ஒரு மணி அளவில் காளிங்கராயன் இல்லம் செல்கிறார். பிறகு மாலை 5 மணிக்கு தங்கம் மஹாலில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் முத்து மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிறகு இரவு காளிங்கராயன் இல்லத்தில் தங்குகிறார்.
மறுநாள் காலை 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சோலார் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கியும் வைக்கிறார். தமிழ்நாடு அரசு சார்பில் 50,088 பேருக்கு சுமார் ரூ.284 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி முடித்த பிறகு காலை 11 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பி மதியம் 2 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
{{comments.comment}}