மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்!

Mar 11, 2025,05:16 PM IST

சென்னை:   தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று நடைபெற்றது . இந்த மக்களவை கூட்டத்தில் தமிழகத்திற்கு நீதி வேண்டுமென திமுக எம்பிக்கள் தொடர் முழக்கமிட்டனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதா என எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆவேசமாக பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்.பிக்கள் அநாகரிகமானவர்கள் என கூறினார். மத்திய கல்வி அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்து திமுக எம்பிக்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளை அடுத்து  அநாகரீகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெற்றார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.




இந்த நிலையில், ஏற்கனவே தமிழகத்திற்கு நிதி தரமாட்டோம் என்ற தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பலரும் கடுமையாக எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டு எம்.பிக்கள் அநாகரிகமாணவர்கள் என்று கூறியுள்ளார் தர்மேந்திர பிரதான். இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் வலுத்து வருகிறது. அந்த வரிசையில் முதல்வர் மு. க ஸ்டாலின் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,


தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா? 


NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, 


நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை, அப்படி முன்வராத என்னை யாராலும் வற்புறுத்த முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்