வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

Jul 18, 2026,03:13 PM IST

- எம்.கே. திருப்பதி


அரங்கனுக்கும் அவருக்கும் 

அதே ஊர்:

அரங்கனுக்கும் அவருக்கும் 

அதே பேர்!


ரங்கராஜன்கள் இருவரும் 

ரசவாதிகள்:


அருளிலும் ஆராட்டலிலும் 

அவரவர் அளவில் 

அன்புத் தாதிகள்!


காவிரிக்கரை உதித்த  -  இந்த 

கவிதைப் புயல் 

மையம் கொண்டது

வங்கக் கரையில் :


வாலிபக் கவி 

வகை தொகையில்லாமல் 

வரிகளைக் கொட்டியது 

வாழும் வரையில்!




காவியக் கவிஞரின் 

வாய் குதப்பும் 

வெற்றிலைச் சிவப்பில் - அவர்

வெற்றி சிரிக்கும் :


நீறும் குங்குமமும் என்று

நிதமும் அவர் 

நெற்றி சிரிக்கும்!


மோனை - கவியின் கரத்தில்

வீணை வாசிக்கும்!

அடுத்து எனக்கு

எந்தமிடமென்று 

எதுகை யோசிக்கும்!


இதற்க்கிடை--  இயைபு 

இவரால் எப்படி

இப்படி என்று

இடையிடையே பேசிக்கும்!


சீரும் அடியும் 

நீரும் படியும் போல் 

சீரும் சிறப்புமாய்

செம்மையாய் நேசிக்கும்!


சினிமா பாட்டிலும்

சிலேடை சிதறும் :

பல்லவியும் சரணமும்

பயந்துபோய் பதறும்!


திரைக்கு எழுதினாலும்

திரைப்படமான

இறைக்கு எழுதினாலும்

அதில் --

அருத்தம் விருத்தம்

அளவிட முடியாது!

ஆதிக்கம் குறையாது!


அய்யனின்

ஆற்றல் மூலத்தால்

அதிகம் பாதிக்கப்பட்டது 

எழுதுகோலும் - அந்த

எழுத்தை வாங்கிய தாளும்!


அதுவும்

அத்துனை நாளும்!

போற்றுகிறேன் - என்

புண்ணியன் தாளும்!


அய்யா வாலி  - ஒரு 

அலாதி!

தலைக்கனம் இல்லாத 

இலக்கியவாதி!


(இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்)


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்