- எம்.கே. திருப்பதி
அரங்கனுக்கும் அவருக்கும்
அதே ஊர்:
அரங்கனுக்கும் அவருக்கும்
அதே பேர்!
ரங்கராஜன்கள் இருவரும்
ரசவாதிகள்:
அருளிலும் ஆராட்டலிலும்
அவரவர் அளவில்
அன்புத் தாதிகள்!
காவிரிக்கரை உதித்த - இந்த
கவிதைப் புயல்
மையம் கொண்டது
வங்கக் கரையில் :
வாலிபக் கவி
வகை தொகையில்லாமல்
வரிகளைக் கொட்டியது
வாழும் வரையில்!

காவியக் கவிஞரின்
வாய் குதப்பும்
வெற்றிலைச் சிவப்பில் - அவர்
வெற்றி சிரிக்கும் :
நீறும் குங்குமமும் என்று
நிதமும் அவர்
நெற்றி சிரிக்கும்!
மோனை - கவியின் கரத்தில்
வீணை வாசிக்கும்!
அடுத்து எனக்கு
எந்தமிடமென்று
எதுகை யோசிக்கும்!
இதற்க்கிடை-- இயைபு
இவரால் எப்படி
இப்படி என்று
இடையிடையே பேசிக்கும்!
சீரும் அடியும்
நீரும் படியும் போல்
சீரும் சிறப்புமாய்
செம்மையாய் நேசிக்கும்!
சினிமா பாட்டிலும்
சிலேடை சிதறும் :
பல்லவியும் சரணமும்
பயந்துபோய் பதறும்!
திரைக்கு எழுதினாலும்
திரைப்படமான
இறைக்கு எழுதினாலும்
அதில் --
அருத்தம் விருத்தம்
அளவிட முடியாது!
ஆதிக்கம் குறையாது!
அய்யனின்
ஆற்றல் மூலத்தால்
அதிகம் பாதிக்கப்பட்டது
எழுதுகோலும் - அந்த
எழுத்தை வாங்கிய தாளும்!
போற்றுகிறேன் - என்
புண்ணியன் தாளும்!
அய்யா வாலி - ஒரு
அலாதி!
தலைக்கனம் இல்லாத
இலக்கியவாதி!
(இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்)
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
கம்பனும் கவியும்
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
என் இராமனே!
கொழுக்கட்டை
ஆண் பூ
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
{{comments.comment}}