- செ.சாந்தி சின்னத்தம்பி
தமிழுக்குக் கதியென்று
அமிழ்தாய் இருந்தவன் கம்பனன்றோ!
கம்பனெனும் மாநதியில் மூழ்குகின்றேன்
கையில் அள்ள அள்ள முத்துக்கள்
சந்தநயம் பொங்கி வரும் பாட்டினிலே
சலிப்பேதும் தோன்றாது அவன் ஏட்டினிலே
வீரமோ காதலோ ஏற்றிடுவான் உள்ளக் கூட்டினிலே
உயர்ந்தோங்கி நிற்கிறான் இந்நாட்டினிலே

அடி, தளை, சீர்களிலே
அழகு எதுகை மோனையிலேயே
சொற்களைப் படியாக்கிச்
சொல் நயமும் பொருள் நயமும்
சொக்க வைக்கும் கவிஞனவன்
பல நூற்றாண்டு கடந்தாலும்
பலரது தேடலிலே
பல் நோக்குக் காட்சியிலே
வியந்தே பார்க்க வைக்கும் விருட்சமவன்
இளைப்பாறலாம் இசை பாடலாம் பசியாறலாம்
கவி என்னும் கனி தந்திடும் கற்பகத்தரு அவன்.
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
கம்பனும் கவியும்
என் இராமனே!
கொழுக்கட்டை
ஆண் பூ
முகத்தில் முகம் பார்க்கலாம்
{{comments.comment}}