புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது மாநிலத்தைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா 500 கிலோ இனிப்பு மற்றும் 500 வெடி பாக்ஸ் வாரி வழங்குகிறார்.
தீபாவளியை முன்னிட்டு போனஸ் மற்றும் பல்வேறு விதமான பரிசு பெருட்களை வழங்கி வருவது வழக்கம். அப்படித்தான் புதுச்சேரி முதல்வரும் தனது மாநிலத்தைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் பரிசு பொருட்களை வாரி வழங்குகிறார்.
புதுச்சேரியில் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதில் ரூ.490 வழங்கப்பட்டது. 10 கிலோ அரிசி 2 கிலோ சர்க்கரைக்குப் பதில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவித்தது அரசு.
தீபாவளிக்கு சிறப்பு பரிசு பொதுமக்களுக்கு மட்டும் இல்லை. புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும் தலா 500 பட்டாசு பெட்டிகளும், 500 கிலோ இனிப்பும் பரிசாக முதல்வர் ரங்கசாமி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டு புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். எம்எல்ஏக்கள் தங்களைப் பார்க்க வரும் தொண்டர்களுக்கு இந்த ஸ்வீட் பாக்ஸ்களையும், பட்டாசுகளையும் கொடுப்பதற்கு வசதியாகவே முதல்வர் ரங்கசாமி இப்படி கொடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையிலேயே இது செம முடிவுதான். கண்டிப்பாக தீபாவளிக்கு முன்பாக அமைச்சர்கள், எம்எல்ஏக்களைப் பார்க்க பலரும் வருவார்கள். அவர்களை வெறும் கையுடன் அனுப்பவும் முடியாது. எனவே அவர்களுக்கு இந்த ஸ்வீட் பாக்ஸ், பட்டாசுகள் மிகவும் கை கொடுக்கும் என்பதால் பலரும் முதல்வரின் இந்த சர்ப்பிரைஸ் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}