கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்துக : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Dec 10, 2024,04:43 PM IST

சென்னை: கல்வி உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக  உயர்த்த கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்,பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை ஒன்றிய அரசு 8 லட்ச ரூபாயாக மாற்றியமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வி திட்டம் போன்றவற்றில் வருமான உச்ச வரம்பு 8 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதன் காரணமாக பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.



அகில இந்திய உயர்கல்வி ஆய்வு தரவுகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் மற்ற மாணவர்களைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மெட்ரிக் படிப்புக்கு முந்தையம் மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமான பங்களிக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பிற்கு ஏற்ப இப்பிரிவினர்களுக்கான உதவித்தொகை காண ஆண்டு வருமான உச்ச வரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விவகாரங்களில் இந்திய பிரதமர் அவர்கள் தலையிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக்படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக்கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்திவ் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்ச வரம்பினை 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உடனடியாக உயர்த்தி நீர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணி...ஏமாற்றத்தில் தவெக...அடுத்து என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுறுவிய அமெரிக்கா.. இலங்கை எம்.பி. கவலை

news

ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., தேமுதிக வேட்புமனு தாக்கல்!

news

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ்குமார்.. மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரிட்டர்ன்!

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்