கொழும்பு: இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஈரானியக் கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் இலங்கக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இது கவலைக்குரிய விஷயம் என இலங்கை எம்.பி நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் 'ஐரிஸ் தேனா' என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்த சம்பவம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீரர்கள், இந்தியாவில் கடற்படை பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பியபோது இந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது இந்தியர்களையும் கூட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இலங்கை எம்.பியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே அளித்துள்ள ஒரு பேட்டியில், போர் நடக்கும் இடத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் இத்தகைய ராணுவத் தாக்குதல்கள் நடப்பது இலங்கைக்கும், அண்டை நாடான இந்தியாவுக்கும் ஒரு தீவிரமான பாதுகாப்பு கவலையாகும்.
மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல், சமீபத்தில் இந்தியாவில் (விசாகப்பட்டினம்) நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இத்தகைய மோதல்கள் பரவுவது பிராந்திய நிலைத்தன்மையைப் பாதிக்கும். எனவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்றார் அவர்.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}