கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பத்தூர் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் மேயராக 19வது வார்டு கவுன்சிலரான கல்பனா தேர்வு செய்யப்பட்டார். கோயம்பத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
இந்த நிலையில் அவர் மீது பல்வேறு அதிருப்திகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தனது பதவியை கல்பனா ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போது புதிய மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு இன்று நடந்தது. அதில் ரங்கநாயகி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 29வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரங்கநாயகி, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கோயம்பத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரைத் தேர்வு செய்வார்கள். திமுகவுக்கே அதிக அளவிலான கவுன்சிலர்கள் இருப்பதால் ரங்கநாயகி மேயராகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை ஆளும் திமுக கூட்டணி வென்றது. அதில் திமுக 76 வார்டுகளிலும், காங்கிரஸ் 9, சிபிஐ 4, சிபிஎம் 4, மதிமுக 3 வார்டுகளிலும் வென்றன. அதிமுக கூட்டணிக்கு 4 இடங்களில் வெற்றி கிடைத்தது. அதில் அதிமுகவுக்கு 3 வார்டுகளும், எஎஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு வார்டும் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம்.
கோயம்பத்தூர் மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் தமாகாவைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன். 1996 முதல் 2001 வரை இவர் மேயர் பதவி வகித்தார். அடுத்து அதிமுகைச் சேர்ந்த தா. மலரவன் மேயரானார். 3வது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர். வெங்கடாச்சலம். இவர்தான் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் ஆவார். அதன் பின்னர் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எம். வேலுச்சாமி, கணபதி ராஜ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து மேயர்களாக இருந்தனர். 6வது மேயராக இருந்தவர் கல்பனா. தற்போது 7வது மேயராக ரங்கநாயகி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
{{comments.comment}}