கோயிலுக்குள் செல்ல முயன்ற காங். தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்.. அஸ்ஸாமில் பதட்டம்

Jan 22, 2024,12:13 PM IST

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் படத்ரவா தானில் உள்ள ஸ்ரீமத் சங்கர் தேவா கோயிலுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களுடன் இணைந்து ராகுல் காந்தி மற்றும் கட்சி தொண்டர்கள் பஜனை பாடிய படி சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி என்ற யாத்திரையை  கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் தொடங்கினார். அவரது யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைந்தது. விஸ்வநாத் சவுராலி, ஓவனா ஆகிய பகுதிகளில் அவர் நடை பயணம் மேற்கொண்டார். 


லக்கிம்பூரில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை மர்ம நபர்கள் கிழித்தர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்கு சென்றார். அப்போது ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா முடியும் வரை அனுமதி கிடையாது என்று கூறி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதனை அடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ரோட்டில் அமர்ந்து பஜனை போராட்டத்தில் ஈடுபட்டனர்.




கோயிலுக்கு செல்ல விடாமல் தடுப்பது ஏன் என காவல்துறையிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸார் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்