சென்னை: சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சிற்கு, அவர் எங்கள் தீம் பாட்னர் என்று சொன்ன டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சீமானின் சர்ச்சை கருத்தை ஆதரிக்கிறாரா என எம் பி சுதா கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சீமானின் சர்ச்சை பேச்சுக்கு அவர் எங்கள் தீம் பாட்னர் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியும் வழக்கறிஞரும் ஆன சுதா காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
தான் மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரிகமான மனிதர் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் நிரூபித்திருக்கிறார். பெண்கள் தொடர்பாக பொது வெளியில் அயோக்கியர்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் வசிக்கும் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு பெண்ணை கொச்சைப்படுத்தி பேசி கொண்டிருக்கிறார். சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியில் இருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.
பெரியார் விவகாரத்தில் ஆதாரம் இன்றி அவதூறாக சீமான் பேசியபோது அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சீமான் பேசிய பேச்சுக்கள் எந்த நாகரிக சமுதாயத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறினார்.
மேலும் சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு, அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று சொன்ன டாக்டர். தமிழிசை என்ன சொல்லப் போகிறார். அவர் கருத்தை ஆதரிக்கிறாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}