சென்னை: சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சிற்கு, அவர் எங்கள் தீம் பாட்னர் என்று சொன்ன டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சீமானின் சர்ச்சை கருத்தை ஆதரிக்கிறாரா என எம் பி சுதா கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சீமானின் சர்ச்சை பேச்சுக்கு அவர் எங்கள் தீம் பாட்னர் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியும் வழக்கறிஞரும் ஆன சுதா காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
தான் மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரிகமான மனிதர் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் நிரூபித்திருக்கிறார். பெண்கள் தொடர்பாக பொது வெளியில் அயோக்கியர்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் வசிக்கும் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு பெண்ணை கொச்சைப்படுத்தி பேசி கொண்டிருக்கிறார். சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியில் இருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.
பெரியார் விவகாரத்தில் ஆதாரம் இன்றி அவதூறாக சீமான் பேசியபோது அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சீமான் பேசிய பேச்சுக்கள் எந்த நாகரிக சமுதாயத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறினார்.
மேலும் சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு, அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று சொன்ன டாக்டர். தமிழிசை என்ன சொல்லப் போகிறார். அவர் கருத்தை ஆதரிக்கிறாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}