தேனி: ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது பிரதமர் மோடி உள்ளார். தமிழ்நாட்டை மோடி தத்தெடுத்து நாட்டில் முதன்மை மாநிலமாக மாற்றுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், ஊழல் என்றால் முதலில் நினைவிற்கு வருவது திமுக தான். தற்போது மாஃபியா மற்றும் ரவுடி ராஜாங்கம் தான் நடைக்கிறது. அதுமட்டுமின்றி போதை மருந்து கடத்தலில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக மாறி வருகிறது. கங்காரு குட்டி போல் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் துணை முதல்வர் எங்களை விமர்சிக்கிறார்.

ஓபிஎஸ் அம்மாவின் உன்மை தொண்டர். அவரும் வருவார் என நம்புகிறேன். ஓபிஎஸ் தர்ம யுத்தம் துவங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில் ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வந்திருப்பார் இது உங்களுக்கே தெரியும். 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு உன்மையான விடியல் வர உள்ளது. ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது பிரதமர் மோடி உள்ளார். தமிழ்நாட்டை மோடி தத்தெடுத்து நாட்டில் முதன்மை மாநிலமாக மாற்றுவார்.
ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், தனது படத்திற்கான டிக்கெட் பிளாக்கில் விற்பதை எப்போதாவது தடுக்க முடிந்ததா? 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய் வரை விற்பதை ஒழிக்காதவர் நாட்டின் ஊழலை எப்படி ஒழிப்பார்? வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு கொள்கை எதிரி, புடலங்காய் எதிரி என்று பேசி வரும் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}