சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
கரூரில் நடந்த தவெக கூட்டத்தின்போது மிகப் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யும் இந்த சம்பவம் தொடர்பாக பெரும் சோகமாகியுள்ளார். தனது வீட்டிலேயே கடந்த 2 நாட்களாக முடங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து விஜய்யிடம் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. விஜய்யும் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஜய்க்கு ராகுல் காந்தி ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊக்கமுடன் செயல்படுமாறும் அவர் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.
இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, விஜய் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அனேகமாக முக்கியப் புள்ளி யாரையேனும் அவர் சந்திக்கப் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருடன் பாதுகாவலர்களும் உடன் சென்றுள்ளனர்.
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}