கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

Sep 29, 2025,05:08 PM IST

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.


கரூரில் நடந்த தவெக கூட்டத்தின்போது மிகப் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யும் இந்த சம்பவம் தொடர்பாக பெரும் சோகமாகியுள்ளார். தனது வீட்டிலேயே கடந்த 2 நாட்களாக முடங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.




அப்போது கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து விஜய்யிடம் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. விஜய்யும் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஜய்க்கு ராகுல் காந்தி ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊக்கமுடன் செயல்படுமாறும் அவர் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.


இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, விஜய் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அனேகமாக முக்கியப் புள்ளி யாரையேனும் அவர் சந்திக்கப் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருடன் பாதுகாவலர்களும் உடன் சென்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆசையே அலை போலே!

news

அப்பத்தா அப்பத்தா!.. ஒரு நிமிடக் கதை (14)

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

அதிகம் பார்க்கும் செய்திகள்