சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
கரூரில் நடந்த தவெக கூட்டத்தின்போது மிகப் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யும் இந்த சம்பவம் தொடர்பாக பெரும் சோகமாகியுள்ளார். தனது வீட்டிலேயே கடந்த 2 நாட்களாக முடங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து விஜய்யிடம் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. விஜய்யும் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஜய்க்கு ராகுல் காந்தி ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊக்கமுடன் செயல்படுமாறும் அவர் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.
இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, விஜய் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அனேகமாக முக்கியப் புள்ளி யாரையேனும் அவர் சந்திக்கப் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருடன் பாதுகாவலர்களும் உடன் சென்றுள்ளனர்.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}