புதுடில்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பாத யாத்திரைகள் நடத்தப்படவுள்ளது.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி நாடுமுழுவதும் பாரத் ஜோடா யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். இந்த யாத்திரையானது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்றது. நாடு முழுவதும் காங்கிரஸின் செல்வாக்கை அதிகரித்ததோடு, மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தியது.
இந்த யாத்திரைக்கு பெரும் ஆதரவும் காணப்பட்டது. ஆங்காங்கே முக்கியஸ்தர்கள் பலரும் கூட இதில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தனர். தமிழ்நாட்டிலிருந்து கனிமொழி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த யாத்திரை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைவதையும் யாத்திரை நடத்தி கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வருடம் பாரத் ஜோடா யாத்திராயை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை மேற்கொண்டார்.
இந்த யாத்திரையினால் காங்கிரஸ் புத்துயிர் பெற்றது. முதல் யாத்திரையின் வெற்றியை கொண்டாடும் விதமாக மீண்டும் ஒரு யாத்திரையை காங்கிரஸ் துவங்குகிறது. இந்தியா முழுவதும் 722 மாவட்டங்களில் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
{{comments.comment}}