டெல்லி: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகதி என்ற பெயரில் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மறறும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. 3 கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளவையாகும்.
மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. இவற்றை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பது குறித்து நேற்று பேசப்பட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தபோது, தொகுதிப் பங்கீடு முடிவடைந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டபோது புன்னகைத்தபடி, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒற்றுமையாகவே இருப்போம்.. இணைந்தே சந்திப்போம் என்று பதிலளித்தார்.

பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ஒவ்வொரு தொகுதி குறித்தும் விரிவாக பேசினோம். தொகுதிப் பங்கீட்டை முதலில் அறிவிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும். சிவசேனா கட்சியை அவர்கள் உடைத்திருக்கலாம். ஆனால் மக்கள் உத்தவ் தாக்கரேவுடன்தான் இருக்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் அவர்கள் குழப்பம் விளைவித்திருக்கலாம்.. ஆனால் சரத் பவார் பின்னால்தான் மக்கள் உள்ளனர். அனைவரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்றார் ரமேஷ் சென்னிதலா.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உ.பி. பேச்சுவார்த்தை தொடருகிறது
மறுபக்கம் உத்தரப் பிரதேசம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. உ.பி. காங்கிரஸ் சார்பில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் சரியான திசையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சுமூகமாக எல்லாம் முடியும் என்றார்.+
தொடர்ந்து அவர் கூறுகையில், கற்பனைக்கும் எட்டாத வகையில் எங்களுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையிலான உறவு சுமூகமாக உள்ளது. எத்தனை தொகுதிகள் என்பதை மட்டும் நாங்கள் இறுதி செய்ய வேண்டும், அவ்வளவுதான் என்றார் அவர்.
இதெல்லாம் எளிதாக சமாளித்து விடக் கூடிய கட்சிகள்தான். ஆனால் ஆம் ஆத்மி, திரினமூல் காங்கிரஸ் கட்சிகள்தான் அதிக அளவில் எடக்கு மடக்கான கட்சிகள். இவர்களுடன் காங்கிரஸ் எப்படி தொகுதிப் பங்கீட்டை நடத்தப் போகிறது என்பது தெரியவில்லை.
பீகாரில் காங்கிரஸுக்குப் பெரிதாக பிரச்சினை கிடையாது. அங்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே பூர்வாங்கப் பேச்சுக்கள் தொடங்கி விட்டன. நிதிஷா குமார் யாதவின் ஐக்கிய ஜனதாதளம் 17 சீட் வரை கேட்பதாக தெரிகிறது. பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. ராஷ்டிரிய ஜனதாதளமும் 17 சீட் வரை கேட்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட் கிடைக்கலாம். ஒரு தொகுதி சிபிஐ எம்எல் கட்சிக்குப் போக வாயப்புண்டு.
வட மாநில தொகுதிப் பங்கீடுதான் சிக்கலானது என்பதால் முதலில் அங்கு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதை முடித்த பிறகு பிற மாநிலங்களுடன் அது பேசும்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}