மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடு முடிந்தது.. அடுத்து உத்தரப் பிரதேசம்.. வேகம் காட்டும் காங்கிரஸ்!

Jan 10, 2024,10:20 AM IST

டெல்லி:  மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகதி என்ற பெயரில் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மறறும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. 3 கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளவையாகும்.


மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. இவற்றை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பது குறித்து நேற்று பேசப்பட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தபோது, தொகுதிப் பங்கீடு முடிவடைந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டபோது புன்னகைத்தபடி, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒற்றுமையாகவே இருப்போம்.. இணைந்தே சந்திப்போம் என்று பதிலளித்தார்.




பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ஒவ்வொரு தொகுதி குறித்தும் விரிவாக பேசினோம். தொகுதிப் பங்கீட்டை முதலில் அறிவிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும். சிவசேனா கட்சியை அவர்கள் உடைத்திருக்கலாம். ஆனால் மக்கள் உத்தவ் தாக்கரேவுடன்தான் இருக்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் அவர்கள் குழப்பம் விளைவித்திருக்கலாம்.. ஆனால் சரத் பவார் பின்னால்தான் மக்கள் உள்ளனர். அனைவரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்றார் ரமேஷ் சென்னிதலா.


மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.


உ.பி. பேச்சுவார்த்தை தொடருகிறது


மறுபக்கம் உத்தரப் பிரதேசம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.  உ.பி. காங்கிரஸ் சார்பில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் சரியான திசையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சுமூகமாக எல்லாம் முடியும் என்றார்.+


தொடர்ந்து அவர் கூறுகையில், கற்பனைக்கும் எட்டாத வகையில் எங்களுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையிலான உறவு சுமூகமாக உள்ளது. எத்தனை தொகுதிகள் என்பதை மட்டும் நாங்கள் இறுதி செய்ய வேண்டும், அவ்வளவுதான் என்றார் அவர்.


இதெல்லாம் எளிதாக சமாளித்து விடக் கூடிய கட்சிகள்தான். ஆனால் ஆம் ஆத்மி, திரினமூல் காங்கிரஸ் கட்சிகள்தான் அதிக அளவில் எடக்கு மடக்கான கட்சிகள். இவர்களுடன் காங்கிரஸ் எப்படி தொகுதிப் பங்கீட்டை நடத்தப் போகிறது என்பது தெரியவில்லை.


பீகாரில் காங்கிரஸுக்குப் பெரிதாக பிரச்சினை கிடையாது. அங்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே பூர்வாங்கப் பேச்சுக்கள் தொடங்கி விட்டன. நிதிஷா குமார் யாதவின் ஐக்கிய ஜனதாதளம் 17 சீட் வரை கேட்பதாக தெரிகிறது. பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. ராஷ்டிரிய ஜனதாதளமும் 17 சீட் வரை கேட்க வாய்ப்புள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட் கிடைக்கலாம். ஒரு தொகுதி சிபிஐ எம்எல் கட்சிக்குப் போக வாயப்புண்டு.


வட மாநில தொகுதிப் பங்கீடுதான் சிக்கலானது என்பதால் முதலில் அங்கு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதை முடித்த பிறகு பிற மாநிலங்களுடன் அது பேசும்.

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்