காங்கிரஸ் இரண்டாக உடையும்.. பிரியங்காவுக்கு எதிராக கட்சியில் சதி.. பகீர் கிளப்பிய காங்கிரஸ் பிரமுகர்

May 05, 2024,08:39 AM IST

டில்லி : பிரியங்கா காந்திக்கு எதிராக கட்சிக்குள் சதி நடக்கிறது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் என அடுக்கடுக்காக பல தகவல்களை சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் பிரியங்கா காந்தியின் முன்னாள் உதவியாளர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்.


காங்கிரஸ் முன்னாள் பிரமுகரும், பிரியங்கா காந்தியின் உதவியாளராகவும் இருந்த ஆச்சார்யா, பகீர் கிளப்பும் பல தகவல்கள் அடங்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவதற்கு பதிலாக பாகிஸ்தானின் ராவல்பின்டியில் போட்டியிடலாம். ஏனெனில் பாகிஸ்தானின் தான் அவருக்கு புகழும் செல்வாக்கும், மவுசும் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பிரியங்கா காந்திக்கு எதிராக மிகப் பெரிய சதி நடக்கிறது. ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவை கட்சியில் ஓரங்கட்ட பார்க்கிறார்.




காங்கிரஸ் கட்சியின் தலைவர், ராஜ்யசபா எம்பி, தற்போது லோக்சபா தேர்தல் என எந்த பதவியும் பிரியங்காவிற்கு கிடைக்காமல் சதி நடக்கிறது. அமேதியில் போட்டியிடாததால் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அதுவும் பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்கள் ராகுல் காந்தி மீது மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள். ஜூன் 04ம் தேதிக்கு பிறகு அந்த கோபம் வெளியில் வரும். அமேதியில் இருந்து ராகுல் காந்தி, வெளியேறியதும் காங்கிரஸ் தொண்டர்களிடையே மரியாதை போய் விட்டது.


பிரியங்கா காந்தியையும் தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டதால் அது அவரின் ஆதரவாளர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஜூன் 4க்கு பிறகு வெளிப்படும். ஜூன் 4க்கு பிறகு காங்கிரஸ் இரண்டாக உடையும். அப்புறம் ஒரு தலைவர் அல்ல. இரண்டு தலைவர்கள் இருப்பார்கள். ஒன்று ராகுல் காங்கிரஸ், மற்றொன்று பிரியங்கா காங்கிரஸ் என ஆகும்.  ராபர்ட் வதேரா, நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஏன் அமேதியில் மட்டும் தான் போட்டியிட வேண்டுமா? அவர் படித்தவர், திறமையானவர். அவர் சுயேட்சையாகவே போட்டியிட கூடிய வல்லமை படைத்தவர் என்றார். 




பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்தேவும் இதையே வலியுறுத்தி உள்ளார். அவர் கூறுகையில், ரேபரேலியில் எங்க பார்த்தாலும் பிரியங்காவின் போஸ்டர்கள் தான் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் ராகுல் காந்தி, திடீரென அங்கு போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளார் என்றார். 


80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.,யில், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுவதாக தான் முதலில் முடிவு செய்யப்பட்டிருந்ததாம். கடைசி நிமிடத்தில் ராகுல் காந்தி தலையிட்டு தான், பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிடாமல் தடுத்து, தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அமேதியில் போட்டியிடாமல் ரேபரேலியை தேர்வு செய்ததாகவும் கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


20ம் தேதி ரேபரேலி, அமேதி இரு தொகுதிகளிலும் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய, மூத்த நிர்வாகியே ராகுலுக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை சொல்லி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இதயங்கள் நொறுங்கின.. பெங்களூரு வெற்றி.. ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்

news

வங்கக் கடலில்.. மே 22ம் தேதி உருவாகிறது.. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு.. 24ம் தேதி வலுப்பெறும்!

news

நிருபர் கேட்டது.. "விஜய் மாநாட்டிற்கு போவீங்களா".. அதுக்கு சீமான் சொன்னது.. "ஐ ஆம் வெயிட்டிங்"!

news

எம்.ஆர். ராதா ஆன்மீக வேடங்களில் நடிச்சிருக்காரே.. மோடி வேடம் குறித்து சத்யராஜ் விளக்கம்!

news

வடிவேலு பாணியில் சும்மா இருந்தால் பரிசு.. ஆத்தாடி எங்க தெரியுமா.. நம்ம தென் கொரியாவுலதான்!

news

ஒரு முறைகேடும் இல்லை.. தொழிலாளர்களின் எல்ஐசி பிரீமியம் முறையாக செலுத்தப்படுகிறது.. எம்டிசி

news

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்தது.. ஆனாலும் குளிக்க தடை தொடர்கிறது!

news

உருவாகிறது பிரதமர் நரேந்திர மோடி பயோபிக்.. மோடி வேடத்தில் நடிக்கப் போகிறார் சத்யராஜ்!

news

புதிய உச்சத்தில் தங்கம் வெள்ளி விலை.. விறுவிறுவென உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்