கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...

May 16, 2026,04:22 PM IST

- கான்ஸ்டான்டைன்.இ.


கேட்கிறதா......

உற்றுக்கேள்

என் தமிழினமே!


செங்குருதி..

ஓலம்... கண்ணீர்...

அழுகை... கதறல்...

கேட்கிறதா செவி(டர்)க்கு!!


கரைத்துடைக்கும் கைகுட்டைபோல்

என் இனம் துடைக்க கயவன் வந்தான்




தண்ணிஓடும் கால்வாயும்

தரைக்குடைந்த பள்ளமும்

எம் உயிர்காத்த கவசமாமே!


என்ன விதியடா...

இசைப்ரியாக்கள்

பாலச்சந்திரன்கள்

ஆழ்குழி நித்திரையில்!


முள்ளிவாய்களே..

என்ன நிசப்தம்

அழமுடியா உயிர் ஒடுங்கியது

உனக்குள்தானே!


மே 18

இனப்படுகொலை

மானுடமே நினைவில்கொள்..

என் அண்ணன் வருவார்..


(கான்ஸ்டன்டைன். இ, மிலன் நகரம், இத்தாலி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்