சென்னை: அப்பாடா ஒரு வழியா பொங்கல் முடிஞ்சாச்சு.. அட இருங்க பாஸ்.. இன்னும் பொங்கல் முடியலை.. ஏன்னா உங்களுக்கு சூப்பரான ஒரு பொங்கல் டிப்ஸ் தரப் போறோமே இப்போ.. அதையும் செஞ்சு பார்த்துட்டு அப்புறமா பொங்கலை சிறப்பா முடிச்சுக்கலாம்.. என்ன ஓகே.வா.. வாங்க மறுபடியும் கிச்சனுக்குள்ள போகலாம்.
தேவையான பொருட்கள் :
1. வரகு அரிசி - 2 கப் (நன்கு கழுவிக் கொள்ளவும்)
2. பாசிப் பருப்பு - 1 கப்
3. இஞ்சி, பூண்டு - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
4. சீரகம், மிளகு - 1 ஸ்பூன்
5. பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
6. வெல்லம் - 1 கப்பு துருவியது
7. ஏலக்காய் - 3 பொடித்தது
8. நெய் - 2 ஸ்பூன்
9. முந்திரி - 20 (சிறிதாக)
10. கறிவேப்பிலை - 6
செய்முறை :

குக்கரில் வரகு அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து 6 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். (1 க்கு 2 பங்கு என்ற வீதத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
பொங்கலை பாதியாக பிரித்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை பொங்கல் - வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து, ஏலக்காயை தட்டி சேர்க்கவும். பாகு பதம் வந்ததும் வடிகட்டி பாதி எடுத்து வைத்த பொங்கலில் ஊற்றவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்தால் சர்க்கரை பொங்கல் ரெடி.
கார பொங்கல் - சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சிறிது நெய்யில் வறுத்து போட்டு மீதி பொங்கலுடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். சட்னி, சாம்பாருடன் சாப்பிட அருமை.
பலன்கள் :
வரகு அரிசி:
1. வரகு அரிசியில் கோதுமையை விட நார்ச்சத்து அதிகம்.
2. மாவுச்சத்து இதில் குறைவு. ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
3. உடல் எடையை குறைக்க ஏற்றது.
4. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. நிறைவான உணவாக இருக்கும்.
6. குடல் புண் குணமாகும்.
7. மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
8. இரும்பு சத்து, வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம், தாது உப்புக்கள் நிறைந்தது.
9. இதயம் பலப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}