உங்கள் வீட்டில் தினமும் ஒரே மாதிரியான பொரியல் செய்து போர் அடிக்குதா.. சாம்பார் என்றால் அதற்கு காம்பினேஷன் பீன்ஸ் கேரட் பொரியல் தான். பருப்பு என்றால் அதற்கும் பீன்ஸ் கேரட் பொரியல் தான். இப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சா.. அப்ப குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி சொன்ன மாதிரியே பீன்ஸ் பொரியல் செய்து பாருங்கள். நாங்கெல்லாம் செஞ்சு பார்த்து சாப்பிட்டுட்டோம்.. டேஸ்ட் மிகவும் அற்புதமா இருக்கு. நீங்களும் அதே போல ட்ரை பண்ணி பாருங்க.
பீன்ஸ் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
பீன்ஸ் -கால் கிலோ
வெங்காயம்-2
மிளகாய் வத்தல்- 3
வறுத்த நிலக்கடலை-சிறிதளவு
தேங்காய்-ஒரு பல்
கடுகு, உளுந்தம் பருப்பு- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு
முதலில் பீன்ஸ் காயை பொடியாக அரிந்து கொண்டு வேக வைத்துக் கொள்ளவும். மற்றொருபுறம் மிக்ஸியில் தேங்காய், நிலக்கடலை பருப்பு, வத்தல், போன்றவற்றை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு வேக வைத்த பீன்ஸ்காய், உப்பு மஞ்சள் தூள், போட்டு நன்றாக கிளறவும். பின்னர் அரைத்து வைத்த மசாலா கலவையை அதனுடன் சேர்ந்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் ஆனதும் இறக்கவும். ஆரோக்கியமான வித்தியாசமான பீன்ஸ் காய் பொரியல் தயார். சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!
பீன்ஸ் காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
இயற்கையாகவே நார்ச்சத்து மிகுந்த காய் என்றால் அது பீன்ஸ் காய் தான். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். இதில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, ஆகிய சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. குறிப்பாக பீன்ஸ் விதை சிறுநீரக வடிவிலேயே உள்ளதால், இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிறுநீர் கற்களை அகற்ற பேருதவி புரிகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}