சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி பின்னர் த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டோர் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்து வருகின்றனர்.

இதற்கிடையே தனது அடுத்த படமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அந்த வகையில் கூலி படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டுகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல் கமலஹாசனுக்கு விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதேபோன்று ரஜினிக்கும் இப்படம் சூப்பர் ஹிட் கொடுக்கும் எனவும் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பங்குனி மாத சிவராத்திரி வெகு விசேஷமானது.. எப்படி தெரியுமா?
நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?
தெரியுமா...?
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை
தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை
{{comments.comment}}