சிங்கப்பூர்: உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி சற்று ஓய்ந்த கொரோனா தற்பொழுது சிங்கப்பூரில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் லாக்டவுன் போடப்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அனைத்து நாட்டினர்களுக்கும் மரண பயத்தை காண்பித்து சென்றது தான் கொரோனா. முதன் முதலில் 2019ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். ஒட்டுமொத்த நாடுகளையும் லாக்டவுன் போட்டு பூட்டி வைத்த காட்சியை உலகம் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.
கொரோனா பரவல் மற்றும் பல மாதங்கள் நீடித்த லாக்டவுன்களால், உலக நாடுகளின் பொருளாதார நிலை சரிந்தது. ஓவ்வொரு நாடும் தனித்தீவு போலாகின. பல கஷ்டங்களை ஏற்படுத்திய கொரோனா ஓரளவிற்கு குறைந்து அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அவ்வப்போது ஆங்காங்கே அச்சம் காண்பித்து வந்த கொரோனா தற்பொழுது சிங்கப்பூரில் வேகமாக அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 32,035 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு பதிவான அதிகளவு பாதிப்பு. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு 28,410 பேர் பாதிக்கப்பட்டனர். தீவிர கிசிச்சை தேவைப்படும் கொரோனா நொயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்று தெரிவித்திருந்தது.
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தவும், வெளியே போகும்போது கட்டாயம் முகமூடி அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூர் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டும், முகமூடிகளை அணிந்தும் வருகின்றனர். கொரோனா அதிகரிப்பின் காரணமாக ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டாலும் படலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது பரவி வரும் கொரோனா பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த வைரஸ்கள் மனிதனின் உடலில் தங்கி மேலும், பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}