மதுரை அரசரடியில்.. சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அவதி!

Mar 16, 2026,10:32 AM IST
மதுரை: மதுரை அரசரடி தமிழ்த் தென்றல் 3-வது தெருவில் நடைபெறும் முறையற்ற சாலைப் பணிகளால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

இப்பகுதியின் திமுக கவுன்சிலரின் தந்தை கருப்பையா, அதிகாரப் பொறுப்பில் இல்லாத போதும், தனது மகனின் செல்வாக்கைப் பயன்படுத்தி சாலைப் பணிகளைத் தன் வசம் எடுத்துக்கொண்டு தரமற்ற முறையில் செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.





ஏற்கனவே ஓரளவு நன்றாக இருந்த சாலையில் உள்ள சிமெண்ட் செங்கல் கற்களை அகற்றி ஆங்காங்கே  வேறொரு இடத்தில் அடுக்கி வைத்து சேதப்படுத்திய அந்தச் சாலையில்   ஜல்லிக்கற்களை நிரப்பி அதன் மேல் ஏற்கனவே அகற்றி அடுக்கி வைத்த அதே பழைய சிமெண்ட்  கற்களைக் கொட்டிவிட்டு  சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் ஏனோ தானோ என்று அறைகுறை வேலை பார்த்து வருகிறார். 


பழைய கற்களைக் கொண்டே 'ஏனோ தானோ' எனச் செய்யப்படும் இந்த வேலையினால், முன்பு இருந்த சாலையைவிட இந்தச் சாலை இப்போது மிகவும் மோசமான நிலையில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகப் பணிக்குச் செல்வோர்கள் வயதானவர்கள் வரை பலரும் குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். 





சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? சாலைப் பணிகளைத் தரமாக முடித்துக் கொடுத்து மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா? என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு - புதுச்சேரியில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்; புதுவையில் வேட்புமனு தாக்கல் துவக்கம்

news

"என்ன மீரா... ஒரு மாதிரியா பார்க்குற?".. (நீ மழை - 6)

news

யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

news

ஆஸ்கர் 2026 விருது பெற்றவர்களின் முழு பட்டியல்

news

Monday Motivation: நரியும் திராட்சையும்!

news

மதுரை அரசரடியில்.. சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அவதி!

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்