டெல்லி: பாங்காக்கிலிருந்து, ஜெர்மனியின் மியூனிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் கணவன் மனைவி இடையே கடும் சண்டை மூண்டதால் விமானத்தை டெல்லியில் தரை இறக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு சண்டை போட்ட தம்பதியை இறக்கி விட்டு விட்டு விமானம் மியூனிச் புறப்பட்டுச் சென்றது.
வீட்டுக்குள் கணவன் மனைவி சண்டை நடப்பதைப் பார்த்திருக்கிறோம்.. ஏன் தெருவில் கூட சண்டை நடக்கும்.. மற்ற பொது வெளிகளிலும் கூட சண்டைக் காட்சிகள் அரங்கேறுவதைப் பார்த்திருப்போம்.. ஆனால் நடுவானில், ஓடும் விமானத்தில் ஒரு ஜோடி சண்டை போட்டு சக பயணிகளை அலற விட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த அந்த கணவரும், தாய்லாந்தைச் சேர்ந்த அந்த மனைவியும், பாங்காக்கிலிருந்து மியூனிச் கிளம்பிய லூப்தன்சா விமானத்தில் ஏறியுள்ளனர். விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே இருவருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் விமானப் பணியாளர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. நிலைமை மோசமானது.
இதையடுத்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க பைலட் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையம் தொடர்பு கொள்ளப்பட்டது. அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சண்டை போட்ட கணவன் மனைவி விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.
இருவரையும் இறக்கி விட்ட பின்னரே விமானம் மியூனிச் புறப்பட்டுச் சென்றது. ஏன் இந்த சண்டை, எதற்காக கோபம் என்று தெரியவில்லை.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}