டெல்லி: வீட்டு முன்பு வாகனத்தை நிறுத்தியதை தட்டிக் கேட்ட நடிகை ஹூமா குரேஷியின் உறவினரை, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நாடு முழுக்க பார்க்கிங் தொடர்பாக நடந்து வரும் மோதல்களின் நிதர்சனமாக அமைந்திருந்தது. பலரும் சந்திக்கும் பிரச்சினைதான் இது. ஆனால் இது பல நேரங்களில் விபரீதத்தில் போய் முடிந்து விடுகிறது.
சென்னையில் இப்படித்தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக 2 பேருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு கையில் அரிவாளை ஏந்தி மோதிக் கொண்டதைப் பார்த்து மக்கள் அதிர்ந்தனர். இந்த நிலையில் டெல்லியில் ஒரு கொலையில் போய் இந்த மோதல் முடிந்துள்ளது. உயிரைப் பறி கொடுத்தவர் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் வசித்து வந்தவர் ஆசிப் குரேஷி. இவர் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆவார். இவரது வீட்டுக்கு முன்பு நேற்று இரவு ஒருவர் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். வாசலை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தியதால் கோபமடைந்த ஆசிப் குரேஷி, வாகனத்தை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறியுள்ளார். அதைக் கேட்காத அந்த நபர், ஆசிப் குரேஷியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நில்லாமல், இரு வர்றேன் என்று கூறி விட்டுப் போயுள்ளார்.
சற்று நேரம் கழித்து தனது சகோதரரை அழைத்துக் கொண்டு வந்த அந்த நபர் ஆசிப் குரேஷியை வீட்டுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்துள்ளார். பின்னர் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக ஆசிப் குரேஷியை தாக்கியுள்ளனர். கூரிய ஆயுதங்களைக் கொண்டும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் ஆசிப் குரேஷி. அதைத் தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்க முயன்றுள்ளனர். ஆனால் இரு சகோதர்களும் சேர்ந்து வெறித்தனமாக ஆசிப் குரேஷியைத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றச் செயலில் ஈடுபட்ட உஜ்வல் மற்றும் கௌதம் என்ற இருவரைக் கைது செய்துள்ளனர். இருவருக்கும் 18, 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
{{comments.comment}}