டெல்லி: வீட்டு முன்பு வாகனத்தை நிறுத்தியதை தட்டிக் கேட்ட நடிகை ஹூமா குரேஷியின் உறவினரை, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நாடு முழுக்க பார்க்கிங் தொடர்பாக நடந்து வரும் மோதல்களின் நிதர்சனமாக அமைந்திருந்தது. பலரும் சந்திக்கும் பிரச்சினைதான் இது. ஆனால் இது பல நேரங்களில் விபரீதத்தில் போய் முடிந்து விடுகிறது.
சென்னையில் இப்படித்தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக 2 பேருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு கையில் அரிவாளை ஏந்தி மோதிக் கொண்டதைப் பார்த்து மக்கள் அதிர்ந்தனர். இந்த நிலையில் டெல்லியில் ஒரு கொலையில் போய் இந்த மோதல் முடிந்துள்ளது. உயிரைப் பறி கொடுத்தவர் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் வசித்து வந்தவர் ஆசிப் குரேஷி. இவர் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆவார். இவரது வீட்டுக்கு முன்பு நேற்று இரவு ஒருவர் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். வாசலை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தியதால் கோபமடைந்த ஆசிப் குரேஷி, வாகனத்தை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறியுள்ளார். அதைக் கேட்காத அந்த நபர், ஆசிப் குரேஷியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நில்லாமல், இரு வர்றேன் என்று கூறி விட்டுப் போயுள்ளார்.
சற்று நேரம் கழித்து தனது சகோதரரை அழைத்துக் கொண்டு வந்த அந்த நபர் ஆசிப் குரேஷியை வீட்டுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்துள்ளார். பின்னர் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக ஆசிப் குரேஷியை தாக்கியுள்ளனர். கூரிய ஆயுதங்களைக் கொண்டும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் ஆசிப் குரேஷி. அதைத் தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்க முயன்றுள்ளனர். ஆனால் இரு சகோதர்களும் சேர்ந்து வெறித்தனமாக ஆசிப் குரேஷியைத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றச் செயலில் ஈடுபட்ட உஜ்வல் மற்றும் கௌதம் என்ற இருவரைக் கைது செய்துள்ளனர். இருவருக்கும் 18, 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல்,சிலிண்டர் தட்டுப்பாடு...மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை:முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!
உரிமைத்தொகை ஒருபுறம்; உயிர் அச்சம் மறுபுறம் - பெண்களைக் காக்கத் தவறிய திமுக அரசு: சீமான் ஆவேசம்!
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு...ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் மூடல்
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
என்னாது சிலிண்டர் தீந்துருச்சா.. அடுப்பில்லாத சமையல் கைவசம் இருக்கே.. வாங்க வாங்க!
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
{{comments.comment}}