- அ.தாமஸ்
பிரச்சனைகளை பிரச்சனைகளாக பார்ப்பவர்கள் அவ்விடத்திலேயே நின்று விடுவார்கள். அதே நேரத்தில் அதை பெரு வாய்ப்பாகப் பார்ப்பவர்களே நின்ற இடத்திலேயே வென்று விடுகிறார்கள்.
பிரச்சனைகளை சந்திக்காத மனிதர்கள் இல்லை பிரச்சனைகளை சந்திக்கவில்லையெனில் அவர்கள் மனிதர்களே இல்லை. நாம் பல நேரங்களில் பலரும் சிந்திக்கவே முடியாத விடயங்களை சாதனையாக்கி இருக்கிறோம் என்பதை சிந்திக்க மறந்து விடாதீர்கள்.
உங்களையே உற்று நோக்குங்கள் உள்ளொளி உங்களுக்குள் இருந்தே பிரகாசிக்கிறது. வெற்றிக்கான உள்ளொளியை நம்முள் தேடாமல் வெளியில் தேடுவதால் தான் பல நேரங்களில் தோற்றுப் போகிறோம் உதவிட ஒருவரும் கரம் கொடுக்கப் போவதில்லை நாமாக எழாதவரை.

"வா பார்த்துக்கொள்ளலாம் என்று துவங்கி விடு பார்த்துக்கொள்ளலாம்"என்று வாழப் பழகிவிட்டால் எதிரே நிற்கும் எரிமலை கூட அறிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் எடுத்துக்கொள் எல்லாம் உனக்குத்தான் என்று.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
போதை இல்லாப் புத்துலகு
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}