சென்னை: இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் தவெக தலைவர் நடிகர் விஜய் உருவத்தை தனது தோள்பட்டையில் டாட்டூவாக குத்தியுள்ளது வைரலாகியுள்ளது.
விஜய் என்றால் 6 வயது முதல் 60 வயது வரை கிரேஸாக உள்ளவர்கள் அதிகம். விஜய் வெளியில் வந்தாலே திருவிழா போல கூட்டம் கூடி வருகிறது. நடிகராக இப்படி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வரும் விஜய் இப்போது அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார். ஒவ்வொரு இடத்திற்கும் யோசித்து யோசித்துதான் அவர் செல்கிறார். காரணம் அந்த அளவுக்கு இவரைப் பார்க்க கூடும் கூட்டம்தான்.
இப்படிப்பட்ட விஜய்க்கு எல்லாத்துறை பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் கிரிக்கெட்டிலும் பலர் இவரது ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர் வருண் சக்கரவர்த்தி. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி அபாரமான பந்துவீச்சாளர். ஸ்பின் பந்தில் கலக்கி வரும் இவர் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராவார்.
விஜயை ரோல் மாடலாக கருதும் இவர் ஒவ்வொரு பேட்டியிலும் விஜய் குறித்து பேசுவார். விஜய்யின் பஞ்ச் டயலாக் குறித்தும் அவ்வப்போது பேசுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு விஜய்யை நேரில் சந்தித்த போது பல புகைப்படங்களை எடுத்து அவற்றை இணையத்திலும் பகிர்ந்துகொண்டார். இப்போது இங்கிலாந்து தொடரிலும் வருண் சக்கரவர்த்தி அசத்தி வருகிறார்.
இந்நிலையில்,அவர் பயிற்சி மேற்கொண்டபோது அவரது வலது கையில் விஜய்யின் உருவத்தை டாட்டூவாக குத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த தலைவா படத்தில் வரும் பிரபலமான விஜய்யின் போஸை அவர் பச்சையாக குத்தியுள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.
வருண் சக்கரவர்த்திக்கு இயக்குநராகும் ஆசையும் உள்ளதாம். தன்னிடம் சூப்பரான ஒரு கதை உள்ளதாகவும், அதை விஜய் கேட்டு நடிக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. ஆனால் விஜய் இப்போது அரசியலுக்குள் புகுந்து விட்டதால் இந்தக் கதையை சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!
கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக
ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!
{{comments.comment}}