சென்னை: நாம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே, நடிகர்களோ, சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், நாம் சாதாரண மக்களை ஒத்திருக்க வேண்டும், சாதாரண மக்கள் தங்களை நம்முடன் ஒப்பிடும்படியாகவே நாம் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு அஸ்வின் பேட்டி கொடுத்துள்ளார். அதில், கிரிக்கெட் விளையாட்டு குறித்தும், கிரிக்கெட் வீரர்கள் மீதான கிரேஸ் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அஸ்வின் பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு விஷயங்கள் முதலில் இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் சூப்பர் பிரபலங்கள் போன்ற கலாச்சாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். இதை ஊக்குவிக்கக் கூடாது. முன்னோக்கிச் செல்கையில் இந்திய கிரிக்கெட்டில் அனைத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
நாம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே, நடிகர்களோ, சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், நாம் சாதாரண மக்களை ஒத்திருக்க வேண்டும், சாதாரண மக்கள் தங்களை நம்முடன் ஒப்பிடும்படியாகவே நாம் இருக்க வேண்டும். உதாரணமாக விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா என்றால் அவர்கள் நிறைய சாதித்து விட்டனர்.
எனவே அவர்கள் இன்னுமொரு சதம் எடுக்கிறார்கள் என்றால் அது ஏதோ இனி உங்கள் சாதனையல்ல. அது வழக்கமானது, நம் லட்சியங்கள், இலக்குகள் இந்த சாதனைகளை விட பெரியதாக இருக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபிக்காக 5 ஸ்பின்னர்களா? இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து ஆல்ரவுண்டர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்களா? ஆகவே ஹர்திக் பாண்டியாவும் ஆடப்போகிறார், ஜடேஜா, அக்சர் படேலும் ஆடுவார்கள், குல்தீப் யாதவும் இருப்பார்.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தியைச் சேர்க்க வேண்டுமெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை உட்கார வைத்து விட்டு ஹர்திக் பாண்டியாவை 2வது வேகப்பந்து வீச்சாளராகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஸ்பின்னர் ஒருவரை ட்ராப் செய்து விட்டு 3வது வேகப்பந்து வீச்சாளைரக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அஸ்வின்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}