கடலூர்: அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது, திடீரென வகுப்பறைக்குள் புகுந்த கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துடைப்பத்தை கையில் எடுத்து விடுவிடுவென பெருக்கத் தொடங்கியதால் டீச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர். துடைப்பத்தைக் கொடுங்க மேடம் என்று அவர்கள் கேட்டும் கூட மேயர் கொடுக்கவில்லை. அவரை வகுப்பறை முழுவதும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து விட்டுத்தான் துடைப்பத்தைக் கீழே வைத்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்வதற்காக மேயர் சுந்தரி ராஜா இன்று சென்றிருந்தார். அப்போது வகுப்பறையில் ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பறை மண்ணும் தூசியும் ஆக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து இப்படி தூய்மையற்று இருக்கும் இடத்தில் மாணவர்கள் படித்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என பள்ளி ஆசிரியர்களிடம் விமர்சித்தார். அதே வேளையில் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் இப்படி தூய்மையற்று இருக்கக் கூடாது. உடனே சுத்தம் செய்ய வேண்டும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அடுத்து அவர் செய்ததுதான் அனைவரையும் அதிர வைத்தது. எங்கே துடைப்பம் என்று கேட்ட அவர் பின்னர் துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு விடுவிடுவென வகுப்பறையை பெருக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து ஆசிரியர்களும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு டீச்சர் வேகமாக வந்து கொடுங்க மேடம் நாங்களே பெருக்கறோம் என்று கேட்டபோதும் கூட கொடுக்கவில்லை மேயர். அவர் பாட்டுக்கு கடகடவென பெருக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த மாணவர்கள் டேபிளை நகற்றி மேயர் ஈஸியாக பெருக்குவதற்கு உதவினர்.
தரையைப் பெருக்கிய மேயர் அப்படியே செல்புகளையும் கூட துடைப்பத்தால் பெருக்கி தூசி தட்டி அசத்தினார். அந்த கிளாஸ் ரூம் முழுக்க கூட்டிப் பெருக்கி சுத்தமாக்கி விட்டுத்தான் துடைப்பத்தை கீழே வைத்தார் மேயர் சுந்தரி ராஜா. மேயரின் இந்த செயலால், ஆசிரியர்களும் ஊழியர்களும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தனர். பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிவுரையாக மட்டுமே வழங்காமல் தானே செயலில் இறங்கி வகுப்பறைகளை பெருக்கி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு முன் உதாரணத்தை மேயர் வழங்கியது அனைவரைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மாணவர்களுக்கு மேயர் வகுப்பறையை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இப்படித்தான் சமீபத்தில் நடந்த இன்னொரு ஆய்வின்போது வகுப்பறைக்குள் மாணவர்கள் செருப்புகள் இல்லாமல் அமர்ந்திருந்ததைக் கண்டு, ஆசிரியர்களைக் கண்டித்தார். ஆசிரியர்கள் செருப்புடன் பாடம் நடத்தும்போது மாணவர்கள் மட்டும் செருப்பு அணியக் கூடாது என்றால் எப்படி என்று அவர் கண்டித்தார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
{{comments.comment}}